மேலும் அறிய

“ரூ. 5 ஆயிரம் கொடுங்க; மனைவியை சேர்த்து வைக்குறேன்!” மந்திரவாதியை போட்டுத்தள்ளிய கணவர்! காரணம் இதுதான்!

மனைவியை சேர்த்து வைப்பதாக தெரிவித்து ரூ. 5 ஆயிரம் பெற்றுகொண்டு ஏமாற்றிய மந்திரவாதியை கணவன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியை சேர்த்து வைப்பதாக தெரிவித்து ரூ. 5 ஆயிரம் பெற்றுகொண்டு ஏமாற்றிய மந்திரவாதியை கணவன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருவபர் 40 வயதான சாந்தனு பிஹிரா. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளது.  இந்த நிலையில், சாந்தனு பஹிராவுக்கு அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கு அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த சாந்தனுவின் மனைவி பொறுமை இழந்து தன் 2 குழந்தைகளையும் அழைத்துகொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். கோவம் சரியாகி திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக சாந்தனு எவ்வளவோ சமாதானம் செய்தும் அவரது மனைவி வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து, வேறு வழி தெரியாத சாந்தனு, மனைவியுடன் இணைந்து வாழ மந்திரவாதியின் துணையை நாடியுள்ளார். மனியா பாபர் என்று அழைக்கப்படும் 47 வயதான இந்த மந்திரவாதியை பற்றி தெரிந்துகொண்ட சாந்தனு, அவரிடம் தனது மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ஒப்புகொண்ட சாமியார் ரூ. 5000 தரும்படி கேட்டு வாங்கிகொண்டு சில பல பூஜைகளை செய்துள்ளார். 

மனைவி திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த சாந்தனு வெகுநாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மந்திரவாதி மீது ஆத்திரம் அடைந்துள்ளார். இதற்காக, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு நேராக மந்திரவாதி மனியா பாபர் வீட்டுக்கு சென்று ரூ. 5000 பணத்தை திருப்பி தருமாறு முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் நீண்ட ஏற்படவே, பொறுமையிழந்த சாந்தனு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மந்திரவாதி மனியாவை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். இதனால் நிலை குலைந்துபோன மந்திரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாந்தனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மந்திரவாதி மனியா மராட்டியத்தை சேர்ந்தவர் என்றும், அவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்தது. மேலும், மனியா பாபர் கால்நடையை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget