மேலும் அறிய

கஞ்சா... சாராயம்...கொலை... - கள்ளக்குறிச்சியில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் உள்பட 4 பேர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா... சாராயம்...கொலை... - கள்ளக்குறிச்சியில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 

எலவனாசூர் கோட்டை கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை கடத்தி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் அய்யப்பன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபால் இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருளான கஞ்சா பயிர் சாகுபடி செய்து சமுதாய சீர்கேட்டை விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் அய்யாகண்ணு (55) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பள்ளிச்சந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அய்யர் என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து  150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்திருந்தனர்.


கஞ்சா... சாராயம்...கொலை... - கள்ளக்குறிச்சியில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 

திருநாவலூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி வெண்ணிலா என்பவரை கொலை செய்த அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மேற்கண்ட 4 பேரின் குற்ற செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரில் அய்யப்பன், அய்யாகண்ணு , அய்யர், அறுமுகம் 4 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tirupati: ‛என்னுடன் உறவு வைத்தால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்’ திருமலையில் தில்லுமுல்லு சாமியார் கைது!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget