Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold, Silver Price : சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 38 ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 787க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 296க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் அதிரடியாக உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 30 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 835க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 38 ஆயிரத்து 680க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 221க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 768க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராம் ரூபாய் 65க்கு விற்கப்படுகிறது.

பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால் தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
ட்ரெண்டிங் செய்திகள்





















