Breaking News LIVE: விக்ரம் லேண்டரின் உயரம் குறைப்பு - இன்னும் 5 நாட்களில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் - இஸ்ரோ தகவல்

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 18 Aug 2023 06:24 PM
Breaking News LIVE: பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை ஒரு மாதத்திற்கு இயங்காது - கோயில் நிர்வாகம்



Breaking News LIVE: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி

வரவருக்கும் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டள்ள அஜய் ராயிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நிச்சயமாக அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிடுவார். அதற்காகதான், அமேதி மக்கள் இங்கு வந்துள்ளனர். வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட விரும்பினால், எங்கள் தொண்டர்கள் உயிரை கொடுத்து அவரை வெற்றிபெற வைப்பார்கள்" என்றார். 

Breaking News LIVE: ஜெயிலர் படத்தால் கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை - நடிகர் சிவராஜ்குமார்



Breaking News LIVE: நாங்குநேரி விவகாரம் - விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

"நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்" - விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

Breaking News LIVE:சந்திரயான் 3 விண்கலம்: இன்னும் 5 நாட்கள் மட்டுமே.. விக்ரம் லேண்டரின் உயரம் குறைப்பு..

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து நேற்று புரபல்சன் பகுதியில் இருந்து பிரிந்து வந்த லேண்டரின் உயரம் குறைக்கும் பணி இன்று வெற்றிகரமாக நிகழந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கோயிலை காரணமாக்கி தனிநபர்கள் பயன்படுத்தி வந்த ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு..

பரங்கிமலையில் கோயிலை காரணமாக்கி தனிநபர்கள் பயன்படுத்தி வந்த ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோயில் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்பட்ட இடத்தில் தனிநபர்கள் கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்த நிலையில் இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: துரோகம் செய்வதில் அதிமுக தெளிவாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை எப்போதும் தெளிவாக செய்கிறது அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Breaking News LIVE: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணம் ரூபாய் 6 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மீன்பிடித்தொழிலில் 5வது மிகப்பெரிய மாநிலம் தமிழ்நாடு - முதலமைசர் ஸ்டாலின் பெருமிதம்

ராமேஸ்வரம் மண்டபத்தில் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், “மீன்பிடித் தொழிலில் இந்தியாவில் தமிழ்நாடு 5வது பெரிய மாநிலமாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் உதவுகிறார்கள். 1076 கி.மீ கொண்ட நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல். கடல் ஆழமானது மட்டுமல்ல. வளமானது. மீன்வளத்துறை சார்பில் ஏராளாமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார். 

Breaking News LIVE: டெல்டாவில் வாடும் பயிர்களைக் காக்க.. காவிரி விவகார வழக்கு அவசரமாக விசாரிக்க தமிழ்நாடு அரசு முறையீடு

டெல்டா பகுதியில் வாடும் பயிர்களைக் காக்க  காவிரி விவகார வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 

Breaking News LIVE: நெல்லை கண்னன் பெயரில் சாலை பெயர் பலகை திறப்பு

 


திருநெல்வேலியில் மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் பெயரிலான சாலையில் பெயர் பலகை திறக்கப்பட்டது. டவுண் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: களக்காடு தலையணை மூடல் - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி தற்காலிகமாக மூடல் - தண்ணீர் இல்லாத காரணத்தால் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. 

Breaking News LIVE: அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ராமேஸ்வரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Breaking News LIVE: பணம் கேட்டு மிரட்டல் - அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு


விருதுநகர் மாவட்டத்தில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் முத்துசாமியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

Breaking News LIVE: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9,394 கன அடியில் இருந்து 9,938 கன அடியாக அதிகரித்துள்ளது - பாசனத்திற்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 53.50 அடியாகவும், நீர் இருப்பு 20.08 டிஎம்சியாகவும் உள்ளது. 

Breaking News LIVE: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர் - கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Breaking News LIVE: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் - இன்று முன்பதிவு நடைபெறுகிறது

ஓணம் பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் இன்று முன்பதிவு தொடங்குகிறது - ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது.

குறைந்தது தக்காளி விலை..!

கடந்த வாரம் முதல் குறையத்தொடங்கிய தக்காளி விலை இன்று மேலும் 10 ரூபாய் குறைந்து கோயம்பேடு சந்தையில் இன்று கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - சிறப்பு முகாம்..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக நடைபெறுகிறது. 

கொடைக்கானலில் மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தளங்கள் திறப்பு..!

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மேயர் சதுக்கம், பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- பள்ளிக்கல்வித்துறை

புதுச்சேரியில் இன்று வீரானம்பட்டினம் செங்கழுநீரம் கோவில் தேரோட்டம் காரணமாக புதுச்சேரி முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை  450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 454வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.