Argentina vs France LIVE: உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!

Argentina vs France FIFA World Cup Final 2022 LIVE: 22வது உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியின் லைவ் அப்டேட்ஸை ஏபிபி நாடு தளத்தில் இங்கு காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 18 Dec 2022 11:25 PM
உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!

அர்ஜெண்டினா கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு கோல்களை தடுத்தாலும், அர்ஜெண்டினா வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தாலும் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா 

உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!

அர்ஜெண்டினா கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு கோல்களை தடுத்தாலும், அர்ஜெண்டினா வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தாலும் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா 

கோல்கீப்பர் அபாரம்..! முன்னிலை பெற்றது அர்ஜெண்டினா..!

பெனால்டி ஷூட் அவுட் முறையில் எம்பாபே, மெஸ்ஸி இருவரும் தலா 1 கோல்களை அடித்து முன்னிலை வகிக்க வைத்துள்ளனர். 

பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்ற இறுதிப்போட்டி..! கோப்பையை வெல்லப்போவது யார்..?

அர்ஜெண்டினா - பிரான்ஸ் ஆட்டம் சமநிலைக்குச் சென்றதால் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு செல்கிறது.

ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பே..! மீண்டும் சமனான பிரான்ஸ் -அர்ஜெண்டினா..!

எம்பாப்பே மீண்டும் கோல் அடித்ததால் அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணி 3-3 என்ற சமநிலையில் அமைந்துள்ளது. 

மெஸ்ஸியின் அசத்தலான கோலால் முன்னிலை பெற்றது அர்ஜெண்டினா..!

அர்ஜெண்டினா அணியின் மெஸ்ஸியின் சாதுர்யமான திறமையால் அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

கோல் அடிக்க தீவிரம் காட்டும் அர்ஜெண்டினா - பிரான்ஸ்

கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் முயற்சித்தாலும் எதிரணி கோல் அடிக்கவிடக்கூடாது என்று முனைப்பு காட்டி வருகின்றனர். 

கோல் அடிக்க தீவிரம் காட்டும் அர்ஜெண்டினா - பிரான்ஸ்

கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் முயற்சித்தாலும் எதிரணி கோல் அடிக்கவிடக்கூடாது என்று முனைப்பு காட்டி வருகின்றனர். 

2-2 என்ற சமநிலை..! கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கப்போவது யார்..?

இரு அணிகளும் 2-2 என்று சமநிலையில் இருப்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு உள்ளது.

2-2 என்ற நிலையில் சமன்...! கோல் அடிக்க அர்ஜெண்டினா - பிரான்ஸ் தீவிரம்..!

இரு அணி வீரர்களும் சமநிலையில் இருப்பதால் கடைசி கட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அடுத்தடுத்து 2 கோல்கள்..! அர்ஜெண்டினாவை சமன்செய்த பிரான்ஸ்..! ஆட்டத்தில் விறுவிறுப்பு..

பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர் எம்பாபே வீரர் பெனால்டி ஷாட்டில் ஒரு கோல் அடித்ததுடன், அடுத்த கோலையும் விளாசியதால் பிரான்ஸ் அர்ஜெண்டினாவை சமன் செய்துள்ளது. 

மிஸ் செய்த எம்பாப்வே..!

போட்டியின் 70வது நிமிடத்தில் கோல் போட கிடைத்த அருமையான வாய்ப்பை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே தவறவிட்டுள்ளார். 

மிஸ்ஸான கோல்..!

பரபரப்பாக கோல் போஸ்டிடம் பந்தினை கொண்டுவந்த மெஸ்ஸி கோல் அடிக்க முயற்சித்து வாய்ப்பை தவற விட்டுள்ளார். 

கார்னர் ஷாட்..!

இதுவரை அர்ஜெண்டினா அணி 3 கார்னர் ஷாட்டுகளும், பிரான்ஸ் அணி 1 கார்னர் ஷாட்டும் அடித்துள்ளது. 

தொடங்கியது இரண்டாவது ஆட்டம்..!

இரண்டாவது பாதி ஆட்டம்  தொடங்கியது.

அர்ஜெண்டினா முன்னிலை..!

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. 

2 - 0 என அர்ஜெண்டினா முன்னிலை..! குறையாத அக்ரசிவ் மோட்..!

2 - 0 என அர்ஜெண்டினா முன்னிலை வகித்தாலும் அர்ஜெண்டினா அணி தொடர்ந்து அக்ரசிவ் மோடிலேயே விளையாடி வருகிறது. 

ஆனந்த கண்ணீர் விட்ட ஏஞ்சல் டி மரியா..!

தனது நாட்டுக்காக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த உற்சாகத்தில் ஏஞ்சல் டி மரியா கண்ணீர் சிந்தி தனது ஆனந்தத்தினை வெளிப்படுத்தினார். 

மீண்டும் மிரட்டல் கோல் அடித்த அர்ஜெண்டினா..!

போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி  மரியா  மிரட்டாலான கோல் அடித்து அசத்தியுள்ளார். 

அர்ஜெண்டினா - 1, பிரான்ஸ் - 0

பெனால்டி ஷாட்டில் முதல் கோல் அடித்த மெஸ்ஸிக்கு, இந்த தொடரில் இது 6வது கோல் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு கோல்டன் பூட்டை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 

பெனால்டி கிக்..!

போட்டியின் 23வது நிமிடத்தில் பெனால்டி கிக்கில் மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்கு முதல் கோலை பெற்றுத்தந்துள்ளார். 

கோல் அடிக்க ஆதிக்கம் காட்டும் அர்ஜெண்டினா..! பதிலடி கொடுக்குமா பிரான்ஸ்..?

விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - பிரான்ஸ் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். 

பிரான்ஸ் கோல் கீப்பருக்கு காயம்..!

பிரான்ஸ் கோல் கீப்பர் மீது அர்ஜெண்டினா வீரர் மோதியதில் அவர் மைதானத்தில் வலியால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி அளித்து வருகிறது. 

அர்ஜெண்டினா அக்ரசிவ் மோட்..!

போட்டி தொடங்கிய முதல் நொடியில் இருந்தே அர்ஜெண்டினா மிகவும் ஆக்ரோசமாக அர்ஜெண்டினா அணி விளையாடி வருகிறது. இதுவரை 3 முறை கோல் போட முயற்சித்துள்ளனர். 

மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை போட்டி..!

அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரின் கடைசி உலகக்கோப்பை போட்டி இதுதான். அவர் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என அவரைப்போல் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தொடங்கியது போர்..!

பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போர் தொடங்கியுள்ளது. 


 

மைதானத்தில் வீரர்கள்..!

இரு அணி வீரர்களும் மைதானத்துக்குள் வந்துள்ளனர். இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. 

பற்றி எறியும் கத்தார்..!

உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் கத்தார் முழுவதும் பரபரப்பு காட்டுத்தீபோல ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. 

குவியும் ரசிகர்கள்..!

இறுதிப்போட்டி நடக்கும் லூஸைல் மைதானத்தில் இரு அணி ரசிகர்கள் கோலாகளமாக கொண்டாட்டத்துடன் திரளாக குவிந்து வருகின்றனர். 

கோல்டன் பூட் யாருக்கு?

கோல்டன் பூட்டை வெல்லும் வாய்ப்பினை அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், பிரான்ஸின் எம்பாப்வே ஆகிய இருவருக்கும் சமவாய்ப்பு உள்ளது. இருவரும் இதுவரை தலா 5 கோல்கள் போட்டுள்ளனர். 


 

இரு அணிகளும் தலா இரண்டு முறை..!

இறுதிப்போட்டியில் மோதவுள்ள இரு அணிகளும் தலா இரண்டு முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

Background

கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய தொடரில்,  32 நாடுகள் பங்கேற்றன.  உலகக்கோப்பை தொடரில்  4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்ட, கோப்பையை வெல்லும் என  எதிர்பார்க்கப்பட்ட  உலகின் நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனிடையே, நாக்-அவுட் சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றியை பதிவு செய்து, முன்னாள் சாம்பியனான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், நடப்பு சாம்பியனான பிரான்சு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும்.






அர்ஜெண்டினா அணி நிலவரம்:


மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தனது முதல்  லீக் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும்,  சுதாரித்துக் கொண்டு தொடர் வெற்றியால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  அரையிறுதியில் 3 கோல்கள் போட்டு வலுவான குரோஷியாவை வீழ்த்தியது. கேப்டன் லியோனல் மெஸ்ஸி நடப்பு தொடரில் 5 கோல்கள் அடிக்க, இளம் வீரரான ஜூலியன் அல்வாரஸ் 4 கோல்கள் அடித்து அணிக்கான வெற்றி நட்சத்திரங்களாக உள்ளனர்.


அர்ஜென்டினாவின் வேராக விளங்கும் 35 வயதான மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச போட்டியில் பல்வேறு கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும், இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. அவரது விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்றால் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


பந்தை துரிதமாக கடத்தி செல்வதிலும், லாவகமாக சகாக்களுக்கு தட்டிக்கொடுப்பதிலும் அற்புதமாக செயல்படும் மெஸ்ஸி, பந்துடன் வலையை நெருங்கினாலும் எல்லாநேரமும் அவரே கோலடிக்க முயற்சிப்பதில்லை. எதிராளி தடுத்துவிடுவார் என்று உணர்ந்து விட்டால், தனிநபர் சாதனையை கருத்தில் கொள்ளாமல்,  உடனடியாக அருகில் உள்ள சக வீரருக்கு பந்தை 'பாஸ்' செய்து அணியின் வெற்றிக்காக செயல்படுவது மெஸ்ஸியின் புகழுக்கு பெரும் காரணமாக உள்ளது. அர்ஜென்டினா நாட்டு கால்பந்தின் அடையாளமாக உள்ள டியாகோ மாரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் மெஸ்சி, மரடோனா பாணியில் 'மேஜிக்' நிகழ்த்துவாரா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பிரான்ஸ் எப்படி?


நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 1962-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து உலக கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்க வரிந்து கட்டுகிறது. அனைத்து துறையிலும் தனது பலத்தை நிரூபித்துள்ள பிரான்சு அணிக்கு, அதிவேகத்தில் விளையாடுவது கூடுதல் பலமாக உள்ளது. இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள கிலியன் எம்பாப்பே, 4 கோல் போட்டுள்ள ஒலிவியர் ஜிரூட், 3 கோல் அடிக்க துணை நின்றுள்ள கிரீஸ்மான் மற்றும் பெர்னாண்டஸ், கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.


எம்பாப்பே கோல் அடிப்பதை தடுப்பதை மையப்படுத்தியே, அர்ஜெண்டினா அணியின் கள வியூகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரான்ஸ் அணியில் சில வீரர்கள் வைரஸ் தொற்றால் உடல்நலக்குறைவுக்கு ஆளான போதிலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை, முழு கவனமும் இறுதிப்போட்டி மீதே இருப்பதாக பயிற்சியாளர் டெசாம்ப்ஸ் தெரிவித்தார்.


தங்க காலணி யாருக்கு?:


நடப்பு தொடரில் இதுவரை பிரான்சின் எம்பாப்பே மற்றும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகியோர் தலா 5 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.  ஒருவேளை இறுதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால், குறைந்த எண்ணிக்கையிலான பெனால்டி கோல்களைப் பெற்ற வீரருக்கு தங்க காலணி வழங்கப்படும்.  லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை.


அதனால் தங்க காலணிக்காக பட்டியலில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார். ஒரு வேளை இன்றைய போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு தங்க காலணி வந்து சேரும். இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தால், அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே தலா 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள்.


முதல் கோல் தான்...


அனைத்து பிரிவுகளிலும் அர்ஜெண்டினா, பிரான்சு அணிகள் சம போட்டியாளர்களாக திகழ்கின்றன. ரசிகர்களின் இடைவிடாத கரகோஷத்துக்கு மத்தியில் உச்சக்கட்ட நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஆனாலும் யார் முதல் கோலை அடிக்கிறார்களோ, ஆட்டத்தில் அந்த அணியின் கையே ஓங்கி நிற்கும். அதனால் வெற்றியை வசப்படுத்துவது யார்? என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. 


பரிசுத்தொகை:


உலகக்கோகோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.