• 'தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்.எல்.ஏ கடிதம்?’ ABP நாடுவிற்கு MLA Exclusive தகவல்..!


திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் தகவல் திருச்சியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. மேலும் படிக்க 



  • Chennai HighCourt : ‘அதிகாரத்திற்கு வந்தாலே அவ்வளவுதான்’ .. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுதலையை விமர்சித்த நீதிபதி..


தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதியமைச்சராக உள்ளார். இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு இருந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதும், மனைவி மணிமேகலை மீதும்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க



  • Vijay Makkal Iyakkam: நடிகர் விஜயின் அடுத்த மூவ்.. வரும் 26ம் தேதி மக்கள் மன்ற ஐடி விங் நிர்வாகிகளை சந்திக்க திட்டம்


நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த, ஐடி விங் நிர்வாகிகளை வரும் 26ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 1000 பேருக்கு, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், மகளிர் அணி, இளைஞர் அணி என புதியதாக 10 அணிகளை உருவாக்குவது தொடர்பாகவும், நகர மற்றும் ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க 



  • திமுக, அதிமுகவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் - கட்சியினருக்கு பாசமாய் பாடம் எடுத்த திருமாவளவன்


தி.மு.க., அ.தி.மு.க.வில் 40 வருடங்களாக ஒரே நபர்களே மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். வி.சி.க.வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 4140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என, வி.சி.க. பொது கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் மறைந்த கட்சியின் மூத்த பெண் நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். மேலும் படிக்க 



  • Fisherman Attack: அதிர்ச்சி..! 2-வது நாளாக மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. தீர்வுதான் என்ன?


இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில்,  வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்திய நாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க