வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரும், ரோஜா வளர்ப்பாளருமான கொடைக்கானலைச் சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன் புதிய வகை ரோஜாப்பூவுக்கு இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டியுள்ளார்.




இந்த ரோஜா வகையானது ஊதா நிறத்துடன் ஊக்கமளிக்கும் நறுமணத்துடன் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். இந்த ரோஜனா செடி 4 முதல் 5 அடி வரை வளரும். கரும்பச்சையுடன் கூடிய இலைகளுடன் இந்த செடி காணப்படும். இந்த புதிய வகை ரோஜா செடியையும், மற்றொரு புதிய வகை ரோஜா செடியான மோன்கொம்பு ரோஜா செடி ஆகியவற்றை புதுடெல்லியைச் சேர்ந்த மலர் வளர்ப்பு விஞ்ஞானியும், மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை முன்னாள் இயக்குனருமான நரேந்திர தத்லானி, சென்னையில் வசித்து வரும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை நேரில் சந்தித்து வழங்கினார்.


இந்திய ரோஜா செடிகள் என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகத்தையும் எம்.எஸ்.சுவாமிநாதனிடம் அவர் வழங்கினார். இந்தியாவில் உள்ள ரோஜா செடிகள், அதன் வகைகள், வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து வெளியாகியுள்ள முதல் புத்தகம் என்று நரேந்திர தத்லானி தகவல் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்தியாவின் வேளாண் விஞ்ஞானிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயத்தில் பல்வேறு ஆய்வு மேற்கொண்டு பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக எந்தவித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் சென்னையில் உள்ள தனது வீட்டிலே அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Tamil news: ராமநாதபுரத்தில் டெல்டா... அக்கா வீட்டில் பெட்ரோல் குண்டு... 13 மாணவிகளுக்கு தொல்லை... இன்னும் பல மதுரை செய்திகள்!




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண