டி.என்.பி.எஸ். தேர்வுகளில் குரூப் 2 தேர்வு மிகவும் முக்கியமானது. இந்த நிலையில், குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் இருந்து சமீபத்தில் திருக்குறள் நீக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து, தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருக்குறள் சார்ந்த கட்டுரை வரைதல் பாடத்திட்டம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் சார்ந்த பாடத்திட்டத்தை இணைத்த புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
TNPSC Exam : எதிர்ப்பை தொடர்ந்து குரூப் 2 தேர்வில் மீண்டும் திருக்குறள்: புதிய பாடத்திட்டத்தை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி!
சுகுமாறன் Updated at: 25 Dec 2021 08:19 AM (IST)
குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை இணைத்து புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
திருக்குறள் - குரூப் 2 தேர்வு