கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின. 


தொடக்க பள்ளிக்க நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செலங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவானது.


இதற்கிடையே, பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்தது. அதற்கு மாறாக டிசம்பர் மாத இறுதியில் திருப்புதல் தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது. 


அதேசமயம் அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்தனர்.


இந்த சூழலில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை அரையாண்டு தேர்வு விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் பேசுகையில், “ பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (டிசம்பொஅர் 25)  முதல் ஜனவரி இரண்டம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!


Meendum Manjapai: அதிமுக வெள்ளைப் பை... திமுக மஞ்சப் பை... எப்போ தான் நெகிழிக்கு Bye...Bye!


புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்


Toyota Hilux pick-up: இந்தியாவுக்கு வரும் ஹைலக்ஸ் பிக்கப்… அடுத்த ஆண்டு வெளியிடுகிறது டொயோட்டா… என்ன சிறப்பு!


மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை!


Nalini gets Parole: நளினிக்கு ஒருமாதம் பரோல் - தமிழக அரசு தகவல்