மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.

Continues below advertisement

விசாரணையின் முடிவில் தற்போது அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும்,  'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்டார் எனவும் அவரை தனிப்படை கடல் பகுதியில் தேடிக்கொண்டிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் அவர் தலைமறைவாகவில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற தகவலும் பரவியது. 

 


இந்தநிலையில்,  அவர் வெளிநாடுகளுக்கு  செல்வதை தடுக்க காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸை விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளது. தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola