மேலும் அறிய

ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது - சிவி சண்முகம் குற்றச்சாட்டு

ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுவதாகவும், எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கக்கூடிய வகையில் அரசு செயல்படுவதால் இது திராவிட மாடல் எனவும் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுவதாகவும் தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கக்கூடிய வகையில் அரசு செயல்படுவதால் இது இது திராவிட மாடல் அரசு இல்லை எனவும் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் மாநிலங்களவை உறுப்பினர்  சிவி சண்முகம் தலைமையில் திமுக ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம்  மக்களை பற்றி சிந்திக்காமல் தன் குடும்பத்தினை மட்டும் சிந்தித்து கொண்டிருக்கும் திமுகவின் செயலபடாத முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளதாகவும் ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும்  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, மக்களை துன்பபடுத்தும் அரசாக திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் தினந்தோறும் பொம்மைக்கு கீ கொடுத்தார் போல் ஸ்டாலின் செயல்படுவதாகவும், தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சராக உள்ளதாகவும், ஆட்சி பொறுப்பேற்ற போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள் அதன் பின் அதனை பற்றி பேசவுமில்லை நிறைவேற்றவும் இல்லை எனவும் கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று என்று கேட்டால் பணம் எண்ணிக்கொண்டு இருப்பதாக தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் 26 சதவிகிதம் கமிஷன் ஆட்சி தான் நடைபெறுவதாகவும் அமைச்சர்கள் யாரும் அமைச்சராக இருப்பதில்லை புரோக்கராக மாறிவிட்டதாகவும் கோட்டைக்கு செல்லாமல் டீ ஆத்துகிற வேலையும், புரோக்கர் வேலையை தான்  அமைச்சர்கள் பார்ப்பதாக கூறினார்.

விவசாயிகள், மக்களை பற்றி கவலையில்லாத அரசாக திமுக அரசு உள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு சென்றவர்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் இறப்பதற்கு முன்பு கூட கடைசியாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் அரை சவரனை 1 சவரனாக கொடுத்தார் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் சிமெண்ட் விலை மூட்டை 520 உயர்ந்துள்ளது ஏனென்றால் திமுகவின் பினாமி குடும்பத்தினர் சிமெண்ட் கம்பெணியை நடத்துவதள் தான் விலை உயர்ந்துள்ளதாகவும், இதில் வரும் கமிஷன் நேரடியாக ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்வதாக குற்றச்சாட்டினார்.

அரசு அதிகாரிகளின் நிலைமை திமுக ஆட்சியில் ஒன்றிய செயலாளர்களின் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் தான் நிலவுவதாகவும், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு வஞ்சித்து கொண்டிருப்பதாகவும், வீட்டு வரி உயர்ந்துள்ளது, மின்சார கட்டணம் கடுமையாக உயர்த்தபட்டுள்ளது. சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது மின்கட்டனம் உயர்வால் சிறு குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விலைவாசி உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்த எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை எதை பற்றியும் சிந்திக்காமல் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கனவு உலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளதாகவும் ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார். தாத்தா பிள்ளை பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பிய சிவி சண்முகம் திமுக ஆட்சியில் எது நடக்குறதோ இல்லையோ எல்லா இடத்திலும் கஞ்சா கிடைப்பதாகவும்,

இது திராவிட மாடல் அரசு இல்லை கஞ்சா அரசாக உள்ளதாகவும் கஞ்சா போய் அபின் அரசாக கூட செயல்படும் நிலை ஏற்படும் போல் என கூறினார். திமுக அரசை குறை சொல்லவேண்டும் என்று கூறவில்லை இன்றைக்கு தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும்,பள்ளி வளாகங்களில் கஞ்சா விற்பனை செய்யபடுவதாகவும்,திமுக அரசில் பணம் இருந்தால் ரத்தத்தையும் உறிய கூடிய அரசாக உள்ளது தெரிவித்தார்.காவல் துறையை வைத்து கொண்டு அதிமுகவை அடக்கிடலாம் என்று தமிழக முதல்வர் நினைக்க வேண்டாம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருனாநிதியையே நாங்கள் பார்த்தவர்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளதாகவும் திமுக அரசுக்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தல் அமைய வேண்டும் என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget