மதுரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் இரு மாணவர்கள் ஒரே கையெழுத்துடன் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற முறைகேடு வழக்கில் 9 பேர் சி.பி.சி.ஐ.டி., காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு


தமிழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 5- ஆம் தேதி விடைத்தாள் திருத்தப்பட்டபோது, மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்கள் கையெழுத்துகள், ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டபோது, அந்த இரு மாணவர்களும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. முழு மதிப்பெண் பெற்ற அந்த மாணவர்கள் மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வருவதும், அடுத்தடுத்த பதிவெண் கொண்டவர்கள் என்பதும்,  சிவகங்கை மாவட்ட விடைத்தாள் திருத்து முகாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு மாணவர்களும் இயற்பியல் உட்பட மூன்று பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


- Madurai: பொங்கல் கேட்ட கணவர்; இட்லி வாங்கிக் கொடுத்த மனைவி - கோபத்தில் நிகழ்ந்த சோக முடிவு


சிபிசிஐடி தனிப்படை விசாரணை


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மதுரையில் நடந்த விடைத்தாள்கள் திருத்தும் முகாமில் இந்த முறைகேடு நடந்ததுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட  மாணவரின் தந்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அப்போது சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் 10 மாதங்களுக்கு மேலாக நடந்த சிபிசிஐடி விசாரணையில் நேற்று மதுரை மாவட்ட கல்வி அலுவலகம் சென்ற சிபிசிஐடி தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கிருந்த முதுகலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபாகரன், கணினி ஆசிரியர் பரமசிவம் , இளநிலை உதவியாளர் கண்ணன், ஆய்வக உதவியாளர் கார்த்திக்ராஜா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நால்வரையும் கைது செய்தது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகாவிற்கு சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.


வழக்கில் 9 பேர் கைது


இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றோர்களான  மதுரை மாவட்டத்தை சேர்ந்த வனிதா- இளஞ்செழியன், கார்த்திகா- விநாயக மூர்த்தி  ஆகிய 4 பேர் மற்றும் மாணவர் ஒருவர் என 9 பேரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 8 பேரை மதுரை மத்திய சிறையிலும் ஒரு மாணவனை சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்துள்ளனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Raayan Twitter Review: 50வது படத்தில் செஞ்சுரி அடித்தாரா தனுஷ்! ராயன் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Madras HC on EPS: நீங்க அதிமுக பொதுச்செயலாளரா? எப்படி? நீதிமன்றம் கொடுத்த ஷாக்! அப்செட்டில் இபிஎஸ்! குஷியில் ஓபிஎஸ் !