கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா  சட்டத்திற்கு விரோதமாக வனப்பகுதியை ஆக்கிரமித்து பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். மலைப்பாதை ஆக்கிரமித்து சாலை அமைக்க அனுமதி எப்படி வழங்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.


TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்; ஆளுநர் கேள்விகளுக்கு விரைவில் பதில்: தமிழ்நாடு அரசு தகவல்




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை , வனத்துறை , தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர் .




தொடர்ந்து மலைப்பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேல்மலை மலை கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் செய்தும் கீழ் மலை கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தெரித்தனர். இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசுகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்  அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபிசிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாகவும் ,


TNCC President : ’உச்சகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேஸ்’ செல்வபெருந்தகை – சசிகாந்த் செந்தில் இடையே கடும் போட்டி..!




மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது . சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார். பிரபல நடிகர்கள் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்  புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tamilnadu Health Dept: ”அரசு மருத்துவமனைகள் சுத்தமாகவும், சாப்பாடு தரமாகவும் இருக்கணும்” - தமிழ்நாடு அரசு உத்தரவு