மேலும் அறிய

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
 

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 
இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி 

மதுரைச் செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சீர்மரபு பழங்குடி சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 20% இடஒதுக்கீட்டினை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தவும், உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், தமிழ்நாட்டில் 2000 முதல் 2021ம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் அடைந்த கல்வி மற்றும் அரசுப் பணிகள் குறித்த வெள்ளையறிக்கை வெளியிடவும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.எனவே, 2022 ஏப்ரல் 10 தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில்,மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு காவலர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது.பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒலிப் பெருக்கியின் சத்தம் அதிகம் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தால் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, மதுரை மாநகர காவல் ஆணையர், சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டம் 2022 ஏப்ரல் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Embed widget