மேலும் அறிய

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
 

கீழமை நீதிமன்றம் தந்த தீர்ப்பை ரத்து செய்யுங்கள் - யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 
இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி 

மதுரைச் செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சீர்மரபு பழங்குடி சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 20% இடஒதுக்கீட்டினை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தவும், உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், தமிழ்நாட்டில் 2000 முதல் 2021ம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் அடைந்த கல்வி மற்றும் அரசுப் பணிகள் குறித்த வெள்ளையறிக்கை வெளியிடவும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.எனவே, 2022 ஏப்ரல் 10 தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில்,மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு காவலர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது.பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒலிப் பெருக்கியின் சத்தம் அதிகம் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தால் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, மதுரை மாநகர காவல் ஆணையர், சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டம் 2022 ஏப்ரல் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget