உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இஸ்லாத்தை கைவிட்டு இந்து மதத்திற்கு மாறினார். இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.


நேற்று காஷியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் கிரி மகாராஜ் முன்னிலையில் மதமாற்ற விழா நடைபெற்றது. Omicron Cases Tally | மஹாராஷ்ட்ராவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி.. நாட்டில் 21-ஆக உயர்ந்தது ஒமிக்ரான் எண்ணிக்கை


இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய போது சடங்கின் ஒரு பகுதியாக தஸ்னா தேவி கோயிலில் நிறுவப்பட்ட சிவலிங்கத்திற்கு ரிஸ்வி பால் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




மதம் மாறியது குறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், "எனது புதிய பெயரான ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு மக்கள் பழகுவதற்கு நேரம் எடுக்கும், ஆனால் காலப்போக்கில் அது நடக்கும். சனாதன தர்மம் உலகின் தூய்மையான மதம். 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது இன்றுதான். டிசம்பர் 6ஆம் தேதியை இந்து மதத்துக்கு மாறத் தேர்ந்தெடுத்தேன். இன்று முதல் நான் இந்து மதத்திற்காக பாடுபடுவேன். முஸ்லிம்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் செல்வதில்லை. இந்துக்களை தோற்கடிப்பதற்காக மட்டுமே அவர்கள் வாக்களிக்கின்றனர்” என்று கூறினார். Watch Video: இந்தியா - நியூசி டெஸ்ட்: ரசிகர்கள் பாட்டுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடிய கேப்டன் கோலி!


கடந்த மாதம் இவர் வெளியிட்ட ‘முகமது’ என்ற புத்தகத்தின் அட்டைப்பக்கத்தில் ஆபாசமான முறையில் பெண் நிற்பது போன்ற படம் இருந்தது. இது, உத்தரபிரதேசத்தில் உள்ள பல மதகுருக்களை கோபப்படுத்தியது. முஹம்மது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக மதகுருமார்கள் ரிஸ்வி மீது குற்றம் சாட்டினர். அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB) உள்ளிட்ட சில மத அமைப்புகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண