Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Delimitation Bill Fails: அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு விவரம்: சொதப்பியது எங்கே?
இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230 வாக்குகள் விழுந்தன.சாதாரண சட்டங்களுக்கு வெறும் பெரும்பான்மை போதுமானது என்றாலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) ஆதரவு கட்டாயம். அந்த கணக்குப்படி பார்த்தால் வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினர்களில், மசோதா வெற்றி பெற குறைந்தபட்சம் 352 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியில் முடிந்தது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், மொத்தம் 528 வாக்குகள் பதிவாகின, அதில் 298 ஆதரவாகவும், 230 எதிராகவும் பதிவாகின. முதல் சுற்றில் மொத்தம் 489 வாக்குகள் பதிவாகின, அதில் 278 ஆதரவாகவும், 211 எதிராகவும் பதிவாகின என்றார்.
ஓரணியில் நின்ற எதிர்க்கட்சிகள்
வாக்கெடுப்பின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் 298உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.எதிர்க்கட்சியான 'இந்திய கூட்டணி ஓரணியில் திரண்டு 230 வாக்குகளை எதிராகப் பதிவு செய்தது.
131-வது சட்டத் திருத்த மசோதாவும் காலி!
தொகுதி மறுவரையை தொடர்புடைய 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவும் இன்று மக்களவையில் தோல்வியடைந்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரை திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தொகுதி மறுவரை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















