மேலும் அறிய

Puducherry Weekend Lockdown: புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு..

புதுவை மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தினால் மகாராஷ்ட்ரா, டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக, பல்வேறு வடிவங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்திலும் இன்று இரவு 10 மணிமுதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தைப் போலவே கடந்த சில தினங்களாகவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதைத் தடுப்பதற்காக அந்த மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் இருந்தது.


Puducherry Weekend Lockdown: புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு..

இந்த நிலையில், புதுவையிலும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரரராஜன் முடிவு செய்துள்ளார். இதன்படி, புதுவையில் வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுச்சேரிக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தவிர, முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் புதுவை முழுவதும் கடைகள் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அனுமதிபெற்ற கடைகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 
Puducherry Weekend Lockdown: புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு..

உணவகங்களில் மதியம் 2 மணிக்கு பின் பார்சல்கள் வழங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நாளை முதல் குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்படும் என்றும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் தேரோட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் கொரோனா விதிகளுடன் வழிபாடுசெய்ய மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் அளவிற்கு கர்நாடகாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அம்மாநில முதல்வர் எடியூரப்பா பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார், தற்போது, கர்நாடகாவிலும் நாளை இரவு முதல் வரும் மே 4-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் இரவு நேரத்தில் போக்குவரத்து சேவை தடைபட உள்ளது. அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget