Breaking LIVE: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு - நாகர்கோயில் ரயில் நிலையத்தில் சோதனை..!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 28 Nov 2022 08:30 PM
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு - நாகர்கோயில் ரயில் நிலையத்தில் சோதனை..!

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோயில் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. 

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. சேகர் என்பவரின் மளிகை கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மணிகண்டன், ஐயப்பன் மரணம். 

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - தாமத்திற்கு காரணம் ஆளுநருக்கு தான் தெரியும்.. அமைச்சர் விளக்கம்..

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான அனைத்து பதில்களையும் தமிழக அரசு ஆளுநரிடம் அளித்துள்ளது. இருப்பினும் தாமத்திற்கான காரணம் ஆளுநருக்கு தான் தெரியும்.


ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இனி யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் என அமைச்சர் ரகுபதி விளக்கம்


 

ஆதார் எண்ணை ஏன் இணைக்க வேண்டும் ? அமைச்சர் விளக்கம்..

இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதாரை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம்

மின் இணைப்புடன் ஆதார் எண் ஏன் இனைக்க வேண்டும்? அமைச்சர் விளக்கம்

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் முதல் 100 யூனிட் இலவசம் வழங்கப்படும். இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து

மத்திய அரசு, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, முடிவை திரும்ப பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேட்டூர் அணை விவரம் : 11,051 கன அடியில் இருந்து 12,521 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,051 கன அடியில் இருந்து 12,521 கன அடியாக அதிகரித்துள்ளது. 

13,000 பள்ளிகளில் “வானவில் மன்றம்” - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

ரூ.20 கோடியில் 13,000 பள்ளிகளில் “வானவில் மன்றம்” முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மேயர் பிரியா தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்..!

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்  (28.11.2022) காலை 10 மணி அளவில் மேயர் ஆர். பிரியா அவர்கள்  நடைபெற உள்ளது

முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்..!

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் செல்கிறார். 

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்..!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. 

காலாவதியான ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதா..!

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், மசோதா காலாவதியாகியுள்ளது.


ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்து இருந்தது, ஆனாலும் ஆளுநர் கையெழுத்து போடாததால், சட்ட மசோதா காலாவதியாகியுள்ளது.

சென்னையில் அதிக பனிமூட்டம்.. விமானங்கள் தரையிறங்க தாமதம்..!

சென்னையில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சிறிதுநேரம் திருப்பிவிடப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டன. 

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை:


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 191வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.