Breaking News LIVE: மெட்ரோ ரயில் தளவாடம் வாங்கியதில் ஊழல் இல்லை - நிர்வாகம்

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ஆர்த்தி Last Updated: 15 Apr 2023 09:49 PM
மின்சாரம் தாக்கியதில் விசிக நிர்வாகி பலி..!

சென்னை அம்பத்தூரில் மின்சாரம் தாக்கியதில் விசிக நிர்வாகி அம்பேத் என்பவர் உயிரிழந்தார்.

Breaking News LIVE: மெட்ரோ ரயில் தளவாடம் வாங்கியதில் ஊழல் இல்லை - நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 2010 மெட்ரோ பணிகளில் ஒப்பந்தம் வழங்க ஆல்ஸ்டம் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்ட புகாருக்கு விளக்கம் அளித்துள்ளது.

Breaking News LIVE: ஆற்றில் முழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


விடுமுறை தினம் என்பதால் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற சந்துரு (12), இனியன் (10) ஆகிய இரண்டு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்ததாகத் தகவல்.

முன்னாள் டிஜிபி ராஜேந்திரனை விசாரிக்க அனுமதி

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க அனுமதி 

Breaking News LIVE: சொத்து மதிப்பை சொல்வதுதான் ஊழல் பட்டியலா - அண்ணாமலைக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சொத்து மதிப்பை சொல்வதுதான் ஊழல் பட்டியலா என அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 


அரசாங்க வலைதளங்களில் உள்ளதைத் தொகுத்து சொத்துப் பட்டியல் கொடுக்க அண்ணாமலைக்கு என்ன அவசியம் என்றும், அரசியல் கட்சிகளை வாக்கு சதவிகித அடிப்படையில் பார்ப்பது சரியல்ல என்று ராஜபாளையத்தில் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.


 

கர்நாடகா தேர்தல்:காங்கிரஸ் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. 

ஐ.ஐ.டி.: மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி

ஏப். 19ம் தேதி சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஐ.டி.: மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி

ஏப். 19ம் தேதி சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஐ.டி.: மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி

ஏப். 19ம் தேதி சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஐ.டி.: மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி

ஏப். 19ம் தேதி சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும், நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எப் தேர்வு எழுதலாம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.





சி.ஆர்.பி.எப் தேர்வு:சு.வெங்கடேசன் வரவேற்பு

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சி.ஆர்.பி.எப் தேர்வு எழுதலாம் என்பது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன்தெரிவித்துள்ளார். 






 

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 329வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.