Breaking News LIVE Tamil : விவசாயிகளுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க முன் வந்தாலும், அது தேவையில்லை - அன்புமணி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 28 Jul 2023 06:15 PM
அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு

கடலூரில் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அதையடுத்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். 

ராமேஸ்வரம் வந்தார் அமித் ஷா

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ள என் மண் என் மக்கள் யாத்திரையை துவக்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் சென்றடைந்தார். 

Breaking News LIVE Tamil : மதுரை வந்தடைந்தார் அமித் ஷா!

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ராமேஷ்வரத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு - மகிழ்ச்சியில் டெல்டா..!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Breaking News LIVE Tamil : தோனி.. தியேட்டரில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!



Breaking News LIVE Tamil : நெய்வேலியில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!



Breaking News LIVE Tamil : நெய்வேலி புறப்பட்டார் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்!



கபினி அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கபினி அணையில் இருந்து தற்போது, 6,300 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அன்புமணி கைது - போராட்டக்காரர்கள் கல்வீச்சு.. வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி

என்.எல்.சி போராட்டக்களத்தில், அன்புமணி கைது - போராட்டக்காரர்கள் கல்வீச்சு.. வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி

ஜூலை 31 -ஆம் தேதி காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் காரணமாக, ஜூலை 31 -ஆம் தேதி காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு

விவசாயிகளுக்கு ரூ.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டாலும் அது தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளுக்கு ரூ.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டாலும் அது தேவையில்லை. : பாமக போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்

எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக 12 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரை பேச வலியுறுத்திய எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக 12 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு

Parliament Session : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே மசோதாக்கள் நிறைவேற்றம்

Parliament Session : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது

அண்ணாமலை பாதயாத்திரையின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்கும் : விஜயகாந்த்

அண்ணாமலை பாதயாத்திரையின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்கும் : விஜயகாந்த்


”பாதயாத்திரை தொடக்கவிழாவில் கலந்துகொள்ளுமாறு அண்ணாமலை தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்தார். தேமுதிக தொடக்க விழாவில் பங்கேற்கும்” - விஜயகாந்த்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் : ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் : ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Aadi Velli : ஆடிவெள்ளி இன்று : சமயபுரத்தில் அலைமோதும் பக்தர்கள்

Aadi Velli : ஆடிவெள்ளி இன்று : சமயபுரத்தில் மாரியம்மன் கோவிலில் இன்று அலைமோதி வழிபடுகிறார்கள் பக்தர்கள்

Actress Shobana : நடிகை ஷோபனாவின் வீட்டில் பணிப்பெண் கைவரிசை

Actress Shobana : நடிகை ஷோபனாவின் வீட்டில் பணிப்பெண் கைவரிசை


ஷோபனாவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் அவரது வீட்டில் சிறுக சிறுக பணத்தை திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. திருடிய பணத்தை அவரது சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்வதாகவும், அவர் மீது போலீஸ் நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது

நாசா: சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 7-வது குழு

நாசா: சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 7-வது குழு: இந்த குழுவினர் 17-ஆம் தேதி ஆகஸ்ட் தங்களின் பணியைத் தொடங்குவதாக நாசா தெரிவித்துள்ளது

G20 PM Modi : ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி

G20 PM Modi : ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி


தமிழில் வணக்கம் சொல்லி உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவுவதில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது - பிரதமர் மோடி

Annamalai Padayatra : நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘ என் மண் என் மக்கள் - மோடியின் தமிழ் முழக்கம் ‘ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். அதை இன்று தொடங்குகிறார்

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 433வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.