Breaking News LIVE: 3 மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 26 Apr 2023 08:00 PM
Breaking News LIVE: 3 மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 

சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் - உயர்நீதிமன்றம் தடை

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை  தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில்,  சர்வதேச கருத்தரங்குகள்,  விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Breaking News LIVE:சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

2013 ஆம் ஆண்டு கஞ்சா கடத்திய வழக்கில் சிறை சென்ற தமிழரான தங்கராஜு சுப்பையாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Breaking News LIVE: அம்பத்தூர் ஆவின் பண்ணையில் அமைச்சர் நாசர் ஆய்வு

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ் கிரீம், மில்க் ஷேக் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். 

Breaking News LIVE: திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

திருப்பூரில் கடத்தப்பட்ட ப்ச்சிளம் குழந்தை மிட்கப்பட்டது.


 

Breaking News LIVE:மே 8ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவு

+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது மே 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Breaking News LIVE: மறைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் உடலுக்கு பிரதமர் அஞ்சலி!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

Breaking News LIVE: குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்.27) டெல்லி பயணிக்கிறார்.


 நாளை மறுநாள் (ஏப்.28) குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைக்க அவருக்கு அழைப்பு விடுப்பதற்காக டெல்லி பயணிக்கிறார்.

Breaking News LIVE: திருச்சி நகைப் பட்டறையில் 950 கிராம் நகைகள் கொள்ளை

திருச்சி நகைப்பட்டறையில் 950 கிராம் மதிப்புள்ள நகைகள், 15 லட்ச ரூபாய் மற்றும் 1.5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News LIVE : ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வி.ஏ.ஓ. கொலை: மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர்  லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமசுப்பிரமணியன்  என்பவர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது மாரிமுத்து என்பவர் கைது.

Breaking News LIVE : அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாளாக நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் பேராட்டம் கைவிடப்பட்டது.

Breaking News LIVE : அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Breaking News LIVE : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக வழக்கு

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Braking News LIVE :மே 4-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஆய்வுக்கூட்டம் வரும் மே 4-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. 

Breaking News LIVE : நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார்.

Breaking News LIVE : செட்டிநாடு குழுமத்தில் 3வது நாளாக சோதனை

செட்டிநாடு குழும நிறுவன இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : திருப்பூரில் குழந்தை கடத்தல் - 3 தனிப்படை அமைப்பு

திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Breaking News LIVE : உதகையில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம்

உதகையில் சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் இன்று நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் டெல்லி புறப்பட்டார்

சென்னையில் இருந்து தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ள நிலையில், ஆளுநர் இன்று டெல்லி சென்றுள்ளார்.

Background

சென்னையில் 11 மாதங்களை கடந்தும் மாற்றமில்லாமல் விற்பனையாகி வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.


அன்றாட வாழ்வில் எரிபொருளின் பங்கு 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 340வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.