Breaking News LIVE: பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 12 Sep 2023 12:52 PM
Breaking News LIVE: பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்டம்பர் 25 ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தன்னையும் இணைக்கக்கோரி ஜெயக்குமார் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

காத்திருப்போர் பட்டியலில் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள்..

ஐ.பி.எஸ் அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்காக இவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE: நடிகை விஜயலட்சுமி புகார் மனு - போலீசார் முன் ஆஜராகாத சீமான்

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் - விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி நிலையில் சீமான் ஆஜராகவில்லை 

Breaking News LIVE: இடைநிலை ஆசிரியர் பணி வேண்டி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர் பணி வேண்டி மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் - கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதி 

Thoothukudi Morning Meal : Scheduled Caste Cook : பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து, பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார் கனிமொழி எம்.பி

பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து, பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார் கனிமொழி எம்.பி


எட்டையபுரத்தில் காலை உணவு திட்டத்தில் பட்டியல் இனத்தனர் சமைத்த உணவை புறக்கணித்த பள்ளியில், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் பேசி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து, பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்


1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு காலை உணவு திட்டம் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் 25ந்தேதி தமிழகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  


சமீபத்தில் இந்த பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதே ஊரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் சமையல் செய்து உணவு கொடுத்துள்ளார். இதற்கு அங்கு பயிலக்கூடிய மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்தனர்.  தங்கள் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினார். 


இந்த பிரச்சனை குறித்து கேட்டறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று (12/09/2023) குறிப்பிட்ட பள்ளிக்கு நேரில் சென்றார். அங்கிருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் அங்கே மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Breaking News LIVE: செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

Breaking News LIVE: அரசுப்பேருந்தை சிறை பிடித்து மக்கள் மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாப்பனப்பள்ளி ஊராட்சியில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் - 9 மாதமாக முறையான குடிநீர் தரவில்லை என ஊராட்சி மன்ற நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

Breaking News Live: மொரொக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800 ஆக அதிகரிப்பு..

மொரொக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800 ஆக அதிகரித்துள்ளது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

Breaking News LIVE: அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 164 அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு - இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 479வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.




 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.