மேலும் அறிய

"பிள்ளை பிறக்கனும்" நரபலியால் நடுங்கிய கிராமம்.. முதியவரின் தலையை வெட்டிய மாந்திரிகவாதி

மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக முதியவரின் தலை வெட்டப்பட்டு அவரது முண்டம் நெருப்பில் கொளுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறக்க வேண்டி, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். 

பீகாரில் 65 வயது முதியவர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக முதியவரின் தலை வெட்டப்பட்டு அவரது முண்டம் கொளுத்தப்பட்டுள்ளது. பிள்ளை வரம் வேண்டி, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். 

நரபலியால் நடுங்கிய கிராமம்:

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் யுகல் யாதவ். இவருக்கு வயது 65. 'ஹோலிகா தகனம்' என்ற திருவிழாவின்போது, யுகுல் யாதவின் தலை வெட்டப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். இவரது முண்டம் நெருப்பில் எரிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவுரங்காபாத் காவல் கண்காணிப்பாளர் (SP) அம்பரீஷ் ராகுல் கூறுகையில், "கடந்த மார்ச் 13 ஆம் தேதி, மதன்பூர் காவல் நிலையத்திற்கு குலாப் பிகா கிராமத்தைச் சேர்ந்த யுகல் யாதவ் காணாமல் போனதாக புகார் வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​பக்கத்து கிராமமான பங்கரில் ஹோலிகா தகனம் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதைபதைக்கும் சம்பவம்:

அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, ​​அங்கிருந்து எரிந்த மனித எலும்புகள் மற்றும் யுகலின் செருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. உடனடியாக நாய் படை வரவழைக்கப்பட்டது. அந்த நாய்கள், விசாரணை அதிகாரிகளை ராமஷிஷ் ரிக்யாசன் என்ற மாந்திரீகவாதியின் வீட்டுக்கு அழைத்து சென்றது.

ராமஷிஷ் வீட்டில் இல்லாத நிலையில், அவரது உறவினர் தர்மேந்திராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததால் அவர் காவலில் எடுக்கப்பட்டார். ​தர்மேந்திராவும் மற்றவர்களும் மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக யுகலை கடத்தி தலை துண்டித்ததாக ஒப்புக்கொண்டனர்.

பின்னர், அவரது உடல் ஹோலிகா தகன நெருப்பில் எரிக்கப்பட்டது. தர்மேந்திராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அருகிலுள்ள வயலில் இருந்து யுகலின் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் மீட்டனர்.

குழந்தை வரம் வேண்டி சுதிர் பாஸ்வானின் சார்பாக ராமஷிஷ் இந்த சடங்கை நடத்தினார். தர்மேந்திராவும் இந்தக் குழுவும் முன்பு ஒரு டீனேஜரை பலியிட்டதாகவும், அவரது உடல் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்கள். சுதிர் பாஸ்வான், தர்மேந்திரா மற்றும் இருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget