Coimbatore: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்; பசுமை வனங்களை உருவாக்கி அசத்தல்!

கிட்டாம்பாளையம்
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள பறவைகளை பாதுகாக்க கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு என்பது தான் அனைவரது நினைவுக்கும் வரும். தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள்



