இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருவள்ளூர் வட்டம். பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். அமைந்துள்ளது. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 34.21 அடியாகவும், கொள்ளளவு 2888 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 


நீர் வரத்து 42,420 கன அடியாக உள்ளதாலும், அம்மாபள்ளி அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாலும் அந்த உபரி நீர் கூடுதலாக அணைக்கு வந்து சேரும் என்பதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக விநாடிக்கு 35,000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக உயர்த்தி திறக்கப்படும்.


தொடர்மழை: தஞ்சையில் சுவர் இடிந்ததில் உரக்கடை சேதம் - மழைநீரில் 100 ஏக்கர் பயிர்கள் மூழ்கின


எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு. மெய்யூர், வெள்ளியூர். தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


TN Rains | கரையைக் கடந்தது தாழ்வு மண்டலம்.. ஆனாலும் மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!


கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!


வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்