Breaking News LIVE: ஏப்ரல் 7 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

உமா பார்கவி Last Updated: 01 Apr 2023 07:34 PM
Breaking News LIVE: ஏப்ரல் 7 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்.7ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

Breaking News LIVE: மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு

சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல் பிடுங்கி சித்ரவதை...5 பேரிடம் விசாரணை..!

பல்லை பிடுங்கி ஏஎஸ்பி சித்ரவதை செய்ததாக புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Breaking News LIVE : வாடகை தாய் சான்று - மதுரை கிளை உத்தரவு

வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. 

Breaking News LIVE : சென்னை மெட்ரோ ரயில் - 69.99 லட்சம் பேர் பயணம்

2023 மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

Breaking News LIVE : 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது. 

Breaking News LIVE : செங்கல்பட்டில் 42 சவரன் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சந்தோஷ் என்பவரின் வீட்டில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : சுங்கக் கட்டண உயர்வு - லாரி உரிமையாளர்கள் போராட்டம்

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Breaking News LIVE : சுங்கக் கட்டண உயர்வு - கவன ஈர்ப்பு தீர்மானம்

சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Breaking News LIVE : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேரோட்டம்

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

Breaking News LIVE : தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உதயமாகிறதா?

தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்க ஆலோசித்து வருவதாக பேரையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். 

Breaking News LIVE : தங்க நகையில் 6 இலக்க HUID எண் கட்டாயம்

இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற  நடைமுறை அமலுக்கு வந்தது.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ 44,480ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,560 ஆக விற்பனையாகிறது. 

Breaking News LIVE : பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த எல்.முருகன்

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசியுள்ளார். 

Breaking News LIVE : தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து 3,000கனஅடியாக உயர்வு

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 1,500லிருந்து 3,000ஆக உயர்ந்துள்ளது. 

Breaking News LIVE : கள்ளக்குறிச்சியில் பெண் எரித்துக் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

Breaking News Live : ஆருத்ரா மோசடி - நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க திட்டம்

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரஷை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Breaking News LIVE : வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.76 குறைவு

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்துள்ளது. மார்ச் மாதம் ரூ.2,268 ஆக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஏப்ரலில் ரூ.2,192 ஆக குறைந்துள்ளது.

Breaking News LIVE : கேரளாவில் வைக்கம் விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

கேரள அரசு சார்பில் இன்று நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Breaking News LIVE : அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்

தமிழகத்தில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Background

சென்னையில் தொடர்ந்து 10 மாதங்களை கடந்தும் மாறாமல் இருக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  முயற்சியில்  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 
சென்னையில் இன்று (ஏப்ரல் 1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 314வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.



இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.