நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎஃப் வாசன்; தட்டித்தூக்கிய போலீஸ்! எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
சென்னையில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று விடியற்காலையில் கைது. காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை.
டிடிஎஃப் வாசன்
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து அவர்களிடத்திலே மோகத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்திலே தற்போது நடித்தும் வருகிறார். இந்த நிலையில் TTF வாசன் சென்னையிலிருந்து-மகாராஷ்டிராவிற்
முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன ?
காஞ்சிபுரம் தாமல் பகுதியை சேர்ந்த பால வேந்தன் என்பவர் கடந்த 18ஆம் தேதி பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கடந்த 17ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு பைபாஸ் பாலம் அருகே ஒரு மேட் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக கவனம் குறைவாக ஓட்டி வந்து ,பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மனித உயிருக்கு மரண விளைவிக்கும் வகையிலும், மோட்டார் சக்கரத்தில் முன் சக்கரத்தில் தூக்கி ஓட்டிக்கொண்டு சாகசம் செய்து பயங்கரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட விபத்தை நேரில் பார்த்தேன். கீழே விழுந்து இருந்த நபரை எழுப்பி விசாரித்த பொழுது தான் டிடிஎஃப் வாசன் என கூறினார். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets