மேலும் அறிய

Crime: காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.. காதலன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலி..

கேரம் விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார்.

புதுச்சேரியில் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டிற்கு சென்று காதலி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலி. இவர் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். கேரம் விளையாட்டு வீராங்கனையான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். நட்பாக தொடங்கிய அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அடிக்கடி காதலன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே ஒருமுறை காதலனுடன் அஞ்சலி பைக்கில் வெளியே சென்றுள்ளார். பின்னர் வீட்டின் முன்னால் வந்து அவரை அந்த வாலிபர் இறக்கி விட்டுள்ளார். இதனைப் பார்த்த அஞ்சலியின் சகோதரர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அழைத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் செய்தது பற்றியும் கோபமடைந்துள்ளனர். 

ஆனால் அஞ்சலி தொடர்ந்து அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் என்னுடன் நீ பேசுவதை விரும்பவில்லை என்றும், என்னை உன்னுடன் பேசக்கூடாது என்று சத்தம் போட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களின் கருத்தால் அஞ்சலி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் வழக்கம்போல நேற்று முன்தினம் காதலன் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். 

அங்கு வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்த நிலையில், உள்ளே சென்ற அவர் நேரடியாக மாடியில் உள்ள காதலன் அறைக்குச் சென்று நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் அஞ்சலி எடுத்த விபரீத முடிவு யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவரது காதலன், அஞ்சலி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவனைக்கு அஞ்சலியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஞ்சலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget