மேலும் அறிய

சென்னையில் திடீரென மாயமான இளைஞர்.. பாலியல் தொழிலாளி காரணமா? கொலையா?

ஜெயந்தன் காணாமல் போனதற்கும், அந்த பெண்ணிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் பழவந்தாங்கல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திடீர் மாயம்
 
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரி  வீட்டில் தங்கியிருந்தார். அதோடு இவர் கடந்த 5  ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில்,  வெளிநாட்டு  விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம், சகோதரி வீட்டிலிருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குப் புறப்பட்டு சென்றார். அப்போது பணி முடிந்ததும், அங்கிருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் போய்விட்டு தான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.
 
காணவில்லை என புகார்
 
ஜெயந்தன் அவ்வாறு கூறிவிட்டு சென்று சில நாட்கள் ஆகியும், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதோடு அவருடைய சகோதரி, ஜெயந்தனுக்கு  செல்போனில் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்து கொண்டிருந்தது. இதை அடுத்து ஜெயந்தன்  சகோதரி, பழவந்தாங்கல் போலீசில், தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார்.  இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
புதுக்கோட்டை சென்ற போலீஸ்
 
இந்நிலையில் ஜெயந்தன் செல்போன் சிக்னலை  வைத்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட பொழுது , புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதனை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி புதுக்கோட்டை பகுதிக்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில்  பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். பாக்கியலட்சுமி, பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
 
பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை
 
அவரை விசாரித்தபொழுது முன்னுக்குப்பின் புறம்பான தகவல்களை தெரிவித்தால் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார். ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், உடலை துண்டு துண்டாக கூறு போட்டு,  சென்னை அடுத்துள்ள கோவளம்  கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காவல்துறை வட்டாரங்கள் கூறுவதென்ன?
 
 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது அந்தப் பெண்ணிற்கும் கொலை செய்யப்பட்ட ஊழியருக்கும் என்ன மாதிரியான சம்பந்தம் இருக்கிறது என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண் மற்றும் கொலையான இளைஞர் இருவரும் முதல் முறை தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர் அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். முழு விசாரணை முடிந்த பின் கொலை நடைபெற்றதா? எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்தனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Embed widget