மேலும் அறிய

Crime: தனிமையில் இருக்குமாறு தகராறு - திருமணத்தை மீறிய உறவில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

சென்னையிலிருந்து வந்த 3 ஆண் நண்பர்களும், செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் போட்டு விட்டு சென்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் செல்லதுரையின் செல்போனுக்கு கடைசியாக பேசியது திருநாவலூர் அருகே உள்ள கோபாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளா (23) என தெரிய வந்தது. ஷர்மிளாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு செல்லதுரை காதலித்து வந்துள்ளார். அப்போது ஷர்மிளாவை ஆபாசமாக வீடியோ எடுத்த செல்லதுரை, அதை வைத்து மிரட்டி ஷர்மிளாவுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் செல்லதுரையின் தொல்லை தாங்காமல் தனது கணவர் வீடான கோபாலகிருஷ்ணபுரம் சென்று விட்டார். சம்பவத்தன்று சர்மிளா வீட்டிற்கு சென்ற செல்லதுரை, அவரை தனிமையாக இருக்க அழைத்துள்ளார். இதில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திர மடைந்த ஷர்மிளா, தான் தூக்கு போட்டுக்கொண்டு சாகப்போவதாக அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதில் பயந்து போன செல்லதுரை பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து புடவையை அறுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்லதுரையின் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளா தனது நண்பர்கள் 3 பேரிடம் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். 

சென்னையிலிருந்து வந்த 3 ஆண் நண்பர்களும், செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் போட்டு விட்டு சென்றனர். இதையடுத்து செல்லதுரை இறந்ததை போலீசாரிடம் சொல்லாமல் மறைத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் அருகே உள்ள கீழ் முத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரத் (22), ராஜ்குமார் (22), சென்னையைச் சேர்ந்த ஆனந்த் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget