மேலும் அறிய

Crime: வீட்டில் பதுக்கி வைத்து போதை ஊசி, மாத்திரை விற்பனை - 4 வாலிபர்கள் கைது

திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்த போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த இளைஞர்கள் 4 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து போதை ஊசி, போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் கருணாவூர் பாட்டையில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், இளைஞர்கள் அந்த வீட்டிலேயே போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் திண்டிவனம் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சிவகுரு(20), என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 73 போதை மாத்திரைகள், போதை ஊசி, கஞ்சா உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கிருந்த திண்டிவனம் கோபால் தெருவை சேர்ந்த கண்ணதாசன் மகன் நித்திஷ்(22), திண்டிவனம் மன்னார் சாமி கோயில் பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன் பிரவீன்ராஜ் (25), வானூர் தாலுக்கா குன்னம் கிராமத்தை சேர்ந்த சிவஞான சக்தி மகன் கோபிநாதன்(23), ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா, 73 போதை மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டிவனத்தில் போதை மாத்திரை, போதை ஊசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் நேற்று அதிரடி சோதனையில் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவிலான போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் விதமாக திண்டிவனம் உட்கோட்டை துணை துணை காவல் கண்காணிப்பாளர் சுராஜ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி  உதவி ஆய்வாளர் சண்முகம், ஐயப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் கிடங்கள் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கிடங்கள் வண்ணாங்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று வாலிபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மூவரிடமிருந்து 150 போதை மாத்திரை 5 குளுக்கோஸ் பாட்டில் மற்றும் 10 போதை ஊசிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் திண்டிவனம் வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் இளந்திரையன்(20), கண்ணன் என்பவரின் மகன் முத்துராமன்(22), திண்டிவனம் கிடங்கள் இரண்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் அப்பு (21) என்கிற ஆகாஷ் என்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திண்டிவனத்தில் போதை மாத்திரை, போதை ஊசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்Red Pix Apologize | ”சவுக்கின் கருத்தில் உடன்பாடில்லை.. மன்னிச்சிடுங்க”Savukku Shankar | கையை பிடித்து முறுக்கி.. வலி தாங்க முடியாத சவுக்கு ADVOCATE பகீர் தகவல்Savukku Shankar | ’’செல்போன் நம்பர் கேட்டாரு!’’பெண் காவலர் பகீர் புகார்! அடுத்த சிக்கலில் சவுக்கு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: கவலை வேண்டாம், கல்லூரியில் சேரலாம்; பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Embed widget