மேலும் அறிய

Crime: 18 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம் செய்யத்தூண்டிய 7 பேர்! ஷாக் சம்பவம்!

பெண் ஒருவரை வற்புறுத்தி மதம் மாற்றம் செய்ய முயன்ற நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவருடைய மதத்தை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சி செய்ததும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பாண்டா பகுதியிலுள்ள அட்டாரா சுங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவீத். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் இந்தப் பெண் தரப்பில் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தன்னை ஜாவீத் சில நபர்களுடன் சேர்ந்து கட்டாயமாக மதம் மாற்ற முயற்சி செய்ததாகவும் மற்றும் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவீத் மற்றும் அப்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அத்துடன் ஜாவீத் முதலில் தன்னுடைய மதத்தை மாற்றி அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க: ஆன்லைன் காதல்! நாடு விட்டு நாடு சென்று காதலனை நேரில் சந்தித்த இளம்பெண் கொடூர கொலை!


எனினும் அதன்பின்னர் அவர் தன்னுடைய மதத்தை மாற்றாமல் அப்பெண்ணை மதம் மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இந்தப் பெண்ணை பல்வேறு நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து ஜாவீத் கொடுமை படுத்தியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஜாவீத், அவருடைய சகோதரர்கள் டாஃபிக், ஆசிஃப் மற்றும் அவருடைய தாய் பேபி ஆகியோரை கைது செய்துள்ளனர்.  அத்துடன் ஜாவீத்தின் சகோதரி இஸ்ரத்தையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்பு உடைய தினேஷ் யாதவ் மற்றும் சுனில் குப்தா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர இந்தச் சம்பவத்தில் அஃப்டாப் என்ற நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் 376,342,506 மற்றும் 170 பி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளம் பெண் ஒருவரை குடும்பத்துடன் சேர்ந்து ஒருவர் மிரட்டி கட்டாய மதம் மாற்ற செய்ய வற்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

13 வயது முதல் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது:

சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  பாண்டியராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வில்லிவாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தப் பெண் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரும் பாண்டியராஜும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி அந்த வீட்டிற்கு செல்லும் போது பாண்டியராஜ் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

தற்போது அந்தச் சிறுமி வளர்ந்து கல்லூரி படித்து வருகிறார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனினும் பாண்டியராஜ் இப்போதும் அந்தப் பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்லும்போது பாலியல் தொந்தரவு அளித்துவந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் தாயும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.


மேலும் படிக்க:ஒரே லிப்ட்டில் பயணித்தபோது கொடுமை! 9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget