மேலும் அறிய

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் வடுகபட்டி பிரேம்நகரை சேர்ந்தவர் செல்லதுரை. போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 47). இவர் சின்ன சூரியூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகன் ரோகித் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிந்தாமணி துறையூர் சென்றுவிட்டார். விடுமுறைக்கு திருச்சி வந்திருந்த ரோகித் கடந்த 17-ந்தேதி நள்ளிரவில் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிந்தாமணியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை அந்த பகுதியில் வசிக்கும் சிந்தாமணியின் உறவினர் ஒருவர் பார்த்து, அவருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடா்ந்து மாலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. உடனே இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். கே.கே.நகர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை  - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியது: திருச்சி மாவட்டத்தில்  குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து குண்டர் சட்டம், உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், அதேபோல் வெளியூர் செல்லும் நபர்கள் தங்களுடைய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்து செல்ல வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது என்றனர். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமார பொருத்தவும் அறிவுரை வழங்கபட்டுள்ளது. அதேசமயம் எந்த நேரத்த்திலும் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். ஆகையால் பொதுமக்கள் அச்சபடாமல் , காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget