மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை வயது (40). இவருடைய மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். சுப்பிரமணி வயது (40) இவருடைய மனைவியும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஏழுமலை சுப்பிரமணி ஆகிய இருவரும் நண்பர்கள், இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் வெளியே சென்று மது அருந்திவிட்டு மதுபோதையில் மீன்பிடிப்பதற்காக கொட்டையூர் கிராமம் அருகே உள்ள ஏரிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஏரிக்கரை ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, இவர்களுடைய லுங்கி, சட்டை, காலணி உள்ளிட்டவற்றை மட்டும் அங்கேயே கழட்டி வைத்துவிட்டு செல்போனையும் இருசக்கர வாகனத்தின் மேல் வைத்துவிட்டு இருவரும் மீன் பிடிக்க ஏரிக்குள் இறங்கி சென்றுள்ளனர். 

 


Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

அதனைத் தொடர்ந்து காலை வரை மீன் பிடிக்க சென்ற இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இருவருடைய துணிகள் மட்டும் இருந்துள்ளது. உடனடியாக ஊர் பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை, உடனடியாக அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் ஏரியில் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பாத ஏழுமலை மற்றும் சுப்பிரமணி ஆகியோரை பரிசல் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் இருவரின் உடலும் கிடைக்காததால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டுத் திரும்பி சென்றனர். இந்நிலையில், இருவரின் உடலும் ஏரியில் மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள்‌ பார்த்துள்ளனர். அதன் பிறகு காவல் துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் இருவரின் உடலையும் மீட்டு, காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 


Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொட்டையூர் கிராமத்தில் வசித்து வந்த ஏழுமலை சுப்பிரமணி ஆகிய இருவரும் தினந்தோறும் ஏரியில் மீன் பிடித்து, அவற்றை விற்பனை செய்துவிட்டு. பின் மாலை வேளையில் இருவரும் மது அருந்திவிட்டு, மீண்டும் இரவு நேரத்தில் ஏரிக்கு சென்று மீன் பிடித்து வருவதை வழக்கமாக தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்,  மது போதையில், இரவு 11 மணியளவில் இருவரும் மீன்பிடிப்பதற்காக ஏரிக்கு சென்று வீடு திரும்பி வராத இருவரின் சடலமும் ஏரியில் இறந்த நிலையில் மிதந்துள்ளது. மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget