மேலும் அறிய

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை

போளூர் அடுத்த உள்ள ஜவ்வாது மலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் திடீர் உயிரிழப்பு பள்ளி ஆசிரியர்களிடம் காவல்துறையினர் விசாரணை.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலையில் அரசவெளி என்ற மலைக்கிராமத்தில் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நம்மியம்பட்டை சேர்ந்த செவத்தான் என்பவரின் மகன் சிவகாசி வயது (15)  10ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவன் சிவகாசியின் முகத்தில் முகப்பரு கட்டி  இருந்துள்ளது. இதனால் மாணவன் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி பள்ளியின் சார்பில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்,  சிவகாசியின் தந்தைக்கு இரவு 9 மணியளவில் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சிவகாசியின் முகம் வீங்கி  உடல்நிலை மோசமாக உள்ளது‌. இதனால் நீங்கள் வந்து உங்களுடைய மகனை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
 
 

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
 
அதன் பிறகு சிவாகாசியின் தந்தை சேவத்தான் பள்ளிக்கு சென்று மகனை பார்த்துள்ளார். அப்போது மாணவனின் முகம் வீங்கி பேசமுடியாத நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்ட தந்தை சேவத்தான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிவகாசி தந்தையிடம் பேசியபோது, மாணவன் மெதுவாக தன்னுடைய முகத்தில் இருந்த முகப்பரு கட்டியணை ஆசிரியர் மகாலட்சுமி ஊசியால் குத்தினார். இதனால் தன்னுடைய முகத்தில் இருந்த கட்டியில் ரத்தம் வந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு முகம் விங்கியது என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து,  சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மறுநாள் காலையில்  நம்மியம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவனுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
 


திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
அதன் பின்னர் மாணவனின் முகம் மிக மோசமான நிலைக்கு சென்றதாலும், மாணவனால் நடக்கமுடியாமல் இருந்ததால்  உடனடியாக பெற்றோர் சிவகாசியை மேல் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் மாணவனின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதால் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்னர் சில மணிநேரங்களில் சிவகாசி  சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  ஜமனாமரத்தூர் காவல்நிலையத்தில் மாணவனின் தந்தை செவத்தான் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜமுனா மரத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
 
இந்த சம்பவம் குறித்து ஆசிரியரி மகாலட்சுமியிடம் பேசுகையில்,
 
பள்ளியில் பயின்று வரும் சிவகாசிக்கு சில நாட்களாக சூடு கட்டி வந்தது. அதில் இருந்து சிவகாசி அவதிப்பட்டு வந்தார். சிவகாசி சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனை நான் துணியின் ‌மூலம் தான் துடைத்தேன். அதன் பிறகு  சிவகாசி தனது தந்தைக்கு போன் செய்தான். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, சிறிது நேரம் கழித்து சிவகாசியின் தந்தை அழைத்தார். அப்போது நான் சிவகாசிக்கு உடல் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்தேன். அப்போது மாணவனின் அண்ணன் பள்ளிக்கு வந்து மாணவனை வீட்டிற்கு அழைத்து சென்றார். சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்று மறுநாள் கழித்து தான் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவனின் உடல் நிலை மோசமாக சென்றதால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
 
 

திருவண்ணாமலை: உண்டு உறைவிடப் பள்ளி மாணவன் திடீர் மரணம் - ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
 
இதை கேட்ட எனக்கு ‌மிகவும் மனது வலித்தது. நன்றாக இருந்த மாணவன் உயிரிழந்தது வருத்தமாக உள்ளது. மாணவன் சிவகாசிக்கு முகத்தில் சூடு கட்டி தான் இருந்தது முகப்பரு இல்லை, அதனை நான் ஊசியால் குத்தவில்லை சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனைதான் துணியால் துடைத்தேன் அப்போது சகமாணவர்களும் இருந்தனர். ஆனால்  நான் ஊசி வைத்து குத்தியதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இவர்கள் இப்படி புகார் அளிப்பதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சியில் உள்ள பிரமுகர்கள் தான் மாணவன் இறப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். எப்படியாவது நான் என்னை இங்கு இருந்து வெளியேற்றி விடலாம் என பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget