மேலும் அறிய

’யாராவது எடுத்திருந்தா கொடுத்துடுங்க’-கோயில் கூட்டநெரிசலில் 50,000 பணம் 1.5 சவரன் தவறவிட்ட பெண்

’’எனது நகை பணத்தை எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் நான் மிகவும் வறுமையில் உள்ளேன் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கதறி கண்ணீர் மல்க அழுதார்’’

பஞ்சபூத தளங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்  பிரதோஷம் வழிபாடு மாதத்தில் இரண்டு முறை பெரிய நந்தி பகவானுக்கு நடைபெறுவது வழக்கம் அதேபோன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் என பலரும் வந்து கலந்துகொண்டு பெரிய நந்தி பகவானை வழிபடுவார்கள் நிலையில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்ணிடமிருந்து மர்ம ஆசாமிகள் 1.5 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (48), இவரது மனைவி சசிகலா (44) இந்த தம்பதியினர் மங்கலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து அவசர தேவைக்காக 1 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். அவர்கள் பெற்று வந்த அந்த பணத்தில் அவர்களது உறவினருக்கு 25 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துவிட்டு, அங்கிருந்து இருவரும் திருவண்ணாமலை வந்துள்ளனர். திருவண்ணாமலையில் தனியார் அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக 25 ஆயிரம் ரூபாய்  செலுத்தி அந்த நகையை மீட்டுள்ளனர். மீதமுள்ள பணத்தை தங்களது பையில் வைத்திருந்துள்ளனர்.

’யாராவது எடுத்திருந்தா கொடுத்துடுங்க’-கோயில் கூட்டநெரிசலில் 50,000 பணம் 1.5 சவரன் தவறவிட்ட பெண்

பின்னர் அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி சசிகலா ஆகியோர்  அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டில் திரளானமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் அரிகிருஷ்ணன், சசிகலா வைத்திருந்த பையிலிருந்து  1.5 சவரன் தங்க நகை மற்றும் ₹50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்த சசிகலா கோயில் வளாகத்தில் கத்தி கூச்சலிட்டு எனது நகை பணத்தை எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் நான் மிகவும் வறுமையில் உள்ளேன் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கதறி கண்ணீர் மல்க அழுதுள்ளார். மேலும், அங்கிருந்த பக்தர்கள் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். 

’யாராவது எடுத்திருந்தா கொடுத்துடுங்க’-கோயில் கூட்டநெரிசலில் 50,000 பணம் 1.5 சவரன் தவறவிட்ட பெண்

இந்தப்பிரதோஷ வழிபாட்டில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். காவல்துறை உயரதிகாரிகள் இருக்கும்போதே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் கொள்ளையர்களை கண்டுபிடிக்க அண்ணாமலையார் கோயிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சசிகலா திருவண்ணாமலை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உதவி ஆய்வாளர் காலில் விழுந்து கதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget