மேலும் அறிய

குழந்தைகள் டவுன்லோட் செய்த App ஆல் வந்த ஆப்பு... பறிபோன ரூ.24 லட்சம் - உஷார் மக்களே

நகை அடகு கடை வைத்து நடத்தி வந்த தம்பதியினரிடமிருந்து 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சம் திருட்டு.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த குமார்(42) இவர் பலசரக்கு கடை வைத்திருக்கிறார். அவருடைய மனைவி, தேவாரம் பகுதியில் நகை அடகு கடை ஒன்றை வைத்து வைத்திருக்கிறார். கணவன், மனைவி இருவருமே வணிகம் செய்து வருவதால், இவர்கள் 2 பேரும், தனித்தனியாக ஆன்டிராய்டு வசதியுள்ள செல்போன்களை பயன்படுத்தி வந்ததுடன், வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை செல்போன்களில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார்கள். இதற்காக தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுடைய குழந்தைகள் அடிக்கடி செல்போன்களை எடுத்து வீடியோ பார்ப்பது, விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் குமார் தனது வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் மனைவியின் வங்கிக் கணக்கு இருப்பு விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக்கு சென்று சரிபார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.


குழந்தைகள் டவுன்லோட் செய்த App ஆல் வந்த ஆப்பு... பறிபோன ரூ.24 லட்சம் - உஷார் மக்களே

அதன்படி கடந்த ஆண்டு இவர், வங்கிக்கு சென்று இருப்பு விவரங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சம் ருபாய்க்கு மேல் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்தவர் பணம் எங்கே சென்றது என்ற விவரங்களை சரிபார்த்த போது, பல்வேறு புதிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக பணம் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


குழந்தைகள் டவுன்லோட் செய்த App ஆல் வந்த ஆப்பு... பறிபோன ரூ.24 லட்சம் - உஷார் மக்களே

அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குழந்தைகள் பதிவிறக்கம் செய்த ஒரு செல்போன் செயலி மூலம், மர்ம நபர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியது  தெரியவந்தது. இந்த நூதன முறையிலான பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பணம் பரிமாற்றம் நடந்த மர்ம நபர்களின் 9 வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

அதில், ஒரு வங்கிக் கணக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே பண்டாரக் பகுதியை சேர்ந்த ஜோகி மஹ்தோ மகன் அர்ஜூன்குமார் (22) என்பவரின் பெயரில் இருந்தது. அவரை போலீசார் தேடி வந்தார்கள், அவர் பெங்களூரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் சென்றனர். அங்கு அர்ஜூன்குமாரை போலீசார் கைது செய்தனர். 12ம் வகுப்பு படித்துவிட்டு அவர் கட்டுமான தொழில் செய்து வந்திருக்கிறார். மேலும், அவர் தனது பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை இந்த மோசடி செய்யும் கும்பலுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் தொகை பெற்றிருப்பது தெரியவந்தது.


குழந்தைகள் டவுன்லோட் செய்த App ஆல் வந்த ஆப்பு... பறிபோன ரூ.24 லட்சம் - உஷார் மக்களே

இதேபோல் பீகாரை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரும் இதுபோன்ற மோசடி கும்பலுக்கு செல்போன், வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அர்ஜூன்குமாரை தேனிக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அவருடைய நண்பர்கள் 2 பேர் உள்பட இந்த கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Embed widget