மேலும் அறிய

Salem Prison: சேலம் சிறையில் கைதிகள் பயன்படுத்திய நவீன செல்போன்... ஸ்கெட்ச் போட்டு பிடித்த வார்டன்கள்

யாரிடமெல்லாம் அவர்கள் பேசினார்கள்? அசம்பாவித சம்பவம் நடத்த திட்டம் தீட்டினார்களா? என போலீசார் விசாரணை.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இதில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தீவிர சோதனைகளை தாண்டியும் செல்போன் சிறைக்குள் செல்கிறது என்றால் சிறை வார்டன்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறைக்குள் அடிக்கடி சோதனை குழுவை சேர்ந்த வார்டன்கள் திடீர் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள 17வது பிளாக் பகுதியில் சென்னையை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறை பகுதியில் வார்டன்கள் யாராவது சென்றால், ஏன் இங்கு அடிக்கடி வருகிறீர்கள்? இவ்வாறு வந்து தொந்தரவு செய்யாதீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அறை மீது வார்டன்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக அங்கு ரகசிய சோதனை நடத்த திட்ட மிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கம் போல செவ்வாய்க்கிழமைகளில் கைதிகளிடம் குறைகள் கேட்கப்படும். அவ்வாறு குறை கேட்பது போல சென்ற கண்காணிப்பாளர் வினோத் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக சென்னை கைதிகள் அறை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர், அப்போது அறையின் எதிர்பகுதியில் உள்ள அரசமரத்தில் 2 கிளைகளுக்கு இடையில் பதுக்கி வைத்திருந்த செல்போனை வார்டன்கள் கண்டெடுத்தனர். மேலும் கழிவறை பகுதியில் புதைத்து வைத்திருந்த செல்போன் சார்ஜரையும் எடுத்தனர். சிறிய வகை செல்போனான அதில், அதிநவீன வசதிகள் இருந்துள்ளது. குறிப்பாக பேச்சை பதிவு செய்யும் வசதியும் அதில் உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்து கைதிகள் நேற்று வரை பேசிய எண்களும் அதில் இருந்துள்ளது. எனவே அவர்கள் நீண்ட நாட்களாக செல்போனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து செல்போனை பதுக்கி வைத்து பயன்படுத்தியதாக சென்னை வடபழனி யுகேந்திரன் (எ) யுகி, அரும்பாக்கம் ஏசா (எ) செபஸ்டீன், ஜெய பிரகாஷ், சேட்டு (எ) மகாலிங்கம் ஆகியோரை உறவினர்கள் சந்திக்க மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பறிமுதல் செய்த செல்போனை சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, செல்போன் பயன்படுத்திய 3 கைதிகள் மீது புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரித்தால் யாரிடமெல்லாம் அவர்கள் பேசினார்கள்? அசம்பாவித சம்பவம் நடத்த திட்டம் தீட்டினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் சென்னையைச் சேர்ந்த கைதிகள் நவீன செல்போனை பயன்படுத்திய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget