மேலும் அறிய

Crime: நெல்லையில் பயங்கரம்.. இளைஞர் வெட்டிக்கொலை..15 வயது சிறுவன் காரணமா? - போலீசார் தீவிர விசாரணை

குறிப்பாக கொலை செய்யப்பட்ட அன்புவின் சகோதரிக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. ( வயது 32 ). இவரது தாய் தந்தை உயிரிழந்த நிலையில் மரியபுஷ்பவம் என்ற தனது பாட்டியுடன் அன்புவும் அவரது சகோதரியும் வசித்து வருகின்றனர். அதோடு அன்பு கிடைத்த வேலையை பார்ப்பதோடு சரிவர வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார், மேலும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு அயர்ந்து கலையரங்கத்திலேயே உறங்கி உள்ளார்.  தொடர்ந்து அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் அன்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்ப முயற்சித்தபோது ஊர் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இது போன்ற தொடர் சம்பவங்கள் இனிமேல் நடைபெற கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அன்புவின் உடலை  போலீசாரால் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன் தனது தந்தையான வேல் என்பவரின் கண்காணிப்போடு கொலை சம்பவத்தை செய்ததாக தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள காவல்துறையின் சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அதனடிப்படையில் காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கொலை சம்பவத்தை மேற்கொண்ட மகனும், தந்தையும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அச்சிறுவனுக்கும் கொலை செய்யப்பட்ட அன்புவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் நொச்சிக்குளம் கிராமத்தில் கஞ்சா பழக்கம் அதிக அளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளதுடன் கொலை சம்பவத்தை செய்த சிறுவனும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் நொச்சிக்குளம் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக கொலை செய்யப்பட்ட அன்புவின் சகோதரிக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய், தந்தையையும் இழந்து சகோதரன் மட்டும் இருந்த நிலையில் அவனும் தற்போது இழந்துவிட்ட நிலையில் இளம் பெண் நிற்கதியாகி உள்ள நிகழ்வு கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget