மேலும் அறிய

Crime: குண்டுமணி மாலைகளை தங்கம் மாலைகள் எனக்கூறி விற்பனை - 2 பேர் கைது

மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி வணிகர்களிடம் நூதன முறையில்  விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி சாத்தனூரை சோ்ந்தவா் கணேசன் என்பவரின் மகன் 45 வயதான கண்ணன். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார்.  இவரிடம் கடந்த நவம்பா் 25 -ஆம் தேதி 2 போ் தங்களது வீட்டில் குழிதோண்டும்போது பூமிக்கு அடியில் தங்கத்தாலான குண்டுமணி மாலை புதையல் கிடைத்ததாகவும், தற்போது மருத்துவ செலவிற்கு பணத்தேவை இருப்பதால் அதனை குறைந்த விலைக்கு விற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Crime: குண்டுமணி மாலைகளை தங்கம் மாலைகள் எனக்கூறி விற்பனை - 2 பேர் கைது

மேலும், அந்த மாலையில் இருந்து 2 மணிகளை கழற்றித்தந்து பரிசோதித்த பின்னா் பணம் தர சொல்லியுள்ளனா். அதனைப் பெற்றுச் சென்ற கணேசன் நகை வியாபாரியிடம் சோதித்ததில் அந்த 2 மணிகளும் தங்கம் என்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்து 3 கிலோ குண்டுமணி மாலையை வாங்கிச் சென்றுள்ளாா். இதேபோல், மயிலாடுதுறை தாலுக்கா கொற்கை கிராமத்தைச் சோ்ந்த பாலகுரு என்பவரிடமும் 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, 1 கிலோ எடையிலான குண்டுமணி மாலைகளை அந்த நபா்கள் விற்றுள்ளனா். பின்னா், அவை போலி நகைகள் எனத் தெரியவந்ததுள்ளது‌. இதனால், ஏமாற்றமடைந்த கண்ணன், பாலகுரு ஆகிய இருவரும் கடந்த மாதம் டிசம்பர் 31ஆம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். 


Crime: குண்டுமணி மாலைகளை தங்கம் மாலைகள் எனக்கூறி விற்பனை - 2 பேர் கைது

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கா்நாடக மாநிலம் மைசூா் உத்தகல்லியைச் சோ்ந்த ராஜாராம் என்பவரின் மகன் 28 வயதான தேவ், பிரேம்லால் என்பவரின் மகன் 44 வயதான ராஜூ ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் மூலம் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளிகள் தேவூ , ராஜிவ் ஆகியோரை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து, அவா்களிடமிருந்து  5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து. இருவருவரையும் கைது செய்தனர்.


Crime: குண்டுமணி மாலைகளை தங்கம் மாலைகள் எனக்கூறி விற்பனை - 2 பேர் கைது

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும், குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலியான குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி வணிகர்களை நம்ப வைத்து வடமாநிலத்தவர்கள் ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு ஊராட்சியில் 4.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் தொடங்கி  ஆதமங்கலம் சாலை வரை சுமார் 3.885 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 


Crime: குண்டுமணி மாலைகளை தங்கம் மாலைகள் எனக்கூறி விற்பனை - 2 பேர் கைது

இவர்களது தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் 4.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை மற்றும் சாலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி தலைஞாயிறு ஊராட்சியில் இன்று தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர் வேலாயுதம் சேரன் செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Chennai Power Cut: சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Chennai Power Cut: சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Embed widget