சீர்காழி அருகே  குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை அரிவாளால் வெட்டிய மற்றொரு ரவுடி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


குடிபோதையில் ரவுடிகளுக்கு இடையே மோதல் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாங்கனாம்பட்டு அருந்ததியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் 36 வயதான சிவா என்கிற மொட்டை சிவா. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் அசரத் அலி என்பவருக்கும் இடையே நேற்று இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அசரத் அலி சிவாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் லேசான காயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 


Delhi-Jammu Highway Accident: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - புனித யாத்திரையின் போது பேருந்து & டிரக் மோதி கோர விபத்து


அரிவாள் வெட்டுப்பட்ட ரவுடி 


வீட்டிற்குச் சென்ற சிவா மீண்டும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக மாங்கனாம்பட்டு கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மற்றொரு நபருடன் டூவீலரில் வந்த அசரத் அலி சிவாவை கொடூரமான அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 


Medical Colleges: அப்படி போடு..! தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா




மருத்துவமனையில் சிகிச்சை


பின்னர் மேல் சிகிச்சைக்கு  சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிந்து அசரத் அலி உள்ளிட்ட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் சிவா, அசரத் அலி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு