Crime: மனைவியை ஒரு இரவுக்கு அனுப்ப சொன்ன அதிகாரி.... அதிர்ச்சியில் தன்னைத்தானே எரித்துகொண்ட கணவன்...!
இந்த வழக்கு தொடர்பாக தற்போது ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர குமார் மற்றும் எழுத்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்” என அதிகாரி கூறியதால், மின்துறை ஊழியர் தன்னை தானே உயிருடன் எரித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் 45 வயதுடைய கோகுல் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மின்துறை பிரிவில் லைன்மேனாக பணியாற்றி வந்தார்.
கோகுல் ஜூனியர் இன்ஜினியர் அலுவலகத்திற்கு வெளியே டீசலை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது ஜூனியர் இன்ஜினியர் நாகேந்திர குமார் மற்றும் எழுத்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் மின்சாரத்துறை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லைன்மேனின் வீடியோவும் வைரலாகியுள்ளது. அதில், அவர் தன்னை இந்த நிலைமைக்கு தள்ளியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்ட பிறகு வீடியோ எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets