மேலும் அறிய

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட குன்றத்தூர் அபிராமிக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

குன்றத்தூர் பிரியாணி அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றியவர் இவர். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்ததாகவும், இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தாய் அபிராமியை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம்  செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
அப்பொழுது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”என் கணவர் விஜய் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக இருக்கிறார். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு பிரியாணி என்றால் உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன். சுந்தரம்தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்மேல் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு இறுதியில் காமத்தில் முடிந்தது. மேலும், என் கணவர் இரவுப்பணி என்று அடிக்கடி சென்றுவிட்டதால், நான் சுந்தரத்துடன் தொடர்பில் இருந்தேன். அதனால் அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
என் குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என சுந்தரம் என்னிடம் தெரிவித்தார். எனவே,  பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன்.மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். அடுத்தநாள் எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன் எனது மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன்.ஆனால், அன்று இரவு அவர் வீட்டுக்கு வர தாமதமானது. இதனால், கள்ளக்காதலன் சுந்தரம் என்னை வீட்டைவிட்டு வெளியே வருமாறு கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
அங்கு இரவு முழுவதும் ஒன்றாக இருந்தோம். காலையில் தாலியை அடமானம் வைத்து கன்னியாகுமரிக்கு என்னை அனுப்பிவைத்தார் என  என திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருந்தார்” என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. கள்ளக் காதலனுக்காக பெற்ற குழந்தைகளை துடிக்கத்துடிக்க கொன்ற தாய் செயல் அப்பொழுது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. குன்றத்தூர் அபிராமி இணையதளவாசிகளால், பிரியாணி அபிராமியாக விமர்சிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
 
தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் அபிராமியும், அவரது கள்ளக்காதலன் ஆன மீனாட்சி சுந்தரத்தையும், நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் நடைபெற உள்ளதால், இந்த வழக்கு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கையில், இந்த வழக்கில் அபிராமியின் மீதான புகார்கள் அனைத்தும் உறுதியாகி உள்ளதால், இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget