மேலும் அறிய

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட குன்றத்தூர் அபிராமிக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

குன்றத்தூர் பிரியாணி அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றியவர் இவர். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்ததாகவும், இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தாய் அபிராமியை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம்  செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
அப்பொழுது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”என் கணவர் விஜய் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக இருக்கிறார். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு பிரியாணி என்றால் உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன். சுந்தரம்தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்மேல் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு இறுதியில் காமத்தில் முடிந்தது. மேலும், என் கணவர் இரவுப்பணி என்று அடிக்கடி சென்றுவிட்டதால், நான் சுந்தரத்துடன் தொடர்பில் இருந்தேன். அதனால் அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
என் குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என சுந்தரம் என்னிடம் தெரிவித்தார். எனவே,  பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன்.மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். அடுத்தநாள் எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன் எனது மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன்.ஆனால், அன்று இரவு அவர் வீட்டுக்கு வர தாமதமானது. இதனால், கள்ளக்காதலன் சுந்தரம் என்னை வீட்டைவிட்டு வெளியே வருமாறு கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
அங்கு இரவு முழுவதும் ஒன்றாக இருந்தோம். காலையில் தாலியை அடமானம் வைத்து கன்னியாகுமரிக்கு என்னை அனுப்பிவைத்தார் என  என திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருந்தார்” என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. கள்ளக் காதலனுக்காக பெற்ற குழந்தைகளை துடிக்கத்துடிக்க கொன்ற தாய் செயல் அப்பொழுது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. குன்றத்தூர் அபிராமி இணையதளவாசிகளால், பிரியாணி அபிராமியாக விமர்சிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
 
தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் அபிராமியும், அவரது கள்ளக்காதலன் ஆன மீனாட்சி சுந்தரத்தையும், நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் நடைபெற உள்ளதால், இந்த வழக்கு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கையில், இந்த வழக்கில் அபிராமியின் மீதான புகார்கள் அனைத்தும் உறுதியாகி உள்ளதால், இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Breaking News LIVE : அஞ்சலிக்காக பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்..
Breaking News LIVE : அஞ்சலிக்காக பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்..
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சிBahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
Breaking News LIVE : அஞ்சலிக்காக பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்..
Breaking News LIVE : அஞ்சலிக்காக பள்ளியில் வைக்கப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்..
Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
NEET UG counselling: நீட் முறைகேடு -  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
NEET UG counselling: நீட் முறைகேடு - இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Embed widget