Crime: கரூரில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கரூர் அருகே உள்ள வாங்கல் பாளையம் பகுதிக்கு உட்பட்ட தீரன் சின்னமலை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் வயது 52 இவர் அப்பகுதியில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இளங்கோவன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் உள்பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.
மேலும், அவர் அலமாரியில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நாணயம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து இளங்கோவன் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மொபட் மீது டிராக்டர் மோதி மூன்று பேர் படுகாயம்
குளித்தலை அருகே உள்ள மேல் நங்கவரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் மொபட் ஒன்றில் குளித்தலை தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த தேவிகா ஆரோக்கிய மேரி ஆகிய இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு மருதூர் வழியாக சென்று கொண்டிருந்தார். மருதூர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில், வந்த டிராக்டர் மொபெட் மோதியது. இதில் முதலில் வந்த மூன்று பேரும் காயம் அடைந்தனர் இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி,
சேலம் மாவட்டம் ராமி ரெட்டியை பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தென்னிலை அடுத்த அஞ்சுூரில் தனியார் கம்பெனியில் டிராக்டர் ஓட்டி வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள கிணற்றில் மோட்டார் சரி செய்வதற்காக இறங்கியுள்ளார். அப்போது கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. இது குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets