மேலும் அறிய
Advertisement
சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனிடம் போலீஸ் விசாரணை
குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு மகனிடம் போலீசார் தீவிர விசாரணை
குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் தாய் தந்தை உயிரிழந்த நிலையில், இதுகுறித்து மகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் (Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈவிபி- டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (83), இவரது மனைவி ஜெய்பார்வதி (72), இருவரும் இவரது மகன் சக்திவேலுடன் வசித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாகவும், வீட்டில் பெற்றோர் மட்டும் தனியாக இருந்த நிலையில், மாலை வீட்டிற்கு வந்து பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, தந்தை கணேசன் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்த நிலையிலும் தாய் ஜெய்பார்வதி நாக்கு கடித்தபடியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார் இறந்து கிடந்த கணவன், மனைவி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டிற்கு இரண்டு சாவி இருப்பதாகவும் காலையில் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில், மாலையில் வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்ததாகவும் பூட்டிய வீட்டிற்குள் பெற்றோர் இருவரும் இறந்து கிடந்தது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த வழக்கை மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து அவரது மகன் பெற்றோரை கொலை செய்தாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி இறந்து கிடந்த சம்பவத்தில் மகனிடம் விசாரணை நடைபெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2024
ஐபிஎல்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion