மேலும் அறிய

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த ஆண் மற்றும் பெண் பணி முடிந்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வேலூர் கோட்டை பகுதிக்கு  சென்றுள்ளனர். அப்போது ஆண் நண்பருடன் சென்ற 26 வயது பெண்ணை அங்கு வந்த 3 பேர்  தாக்கி, 350 ரூபாய் பணம், காதில் அணிந்திருந்த கம்மல், 2 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, ஆண் நண்பரையும் தாக்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை  குற்றச்செயலில் ஈடுபட்ட வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அடமணி (எ) மணிகண்டன் (43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி (எ) சக்திவேல் (21), 17 வயது சிறுவன் ஆகிய 3 நபர்களையும் இவர்களிடம் திருட்டு பொருள் வாங்கி விற்பனை செய்யும் மாரிமுத்து (33) என்பவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையிலும் அடைத்தனர்.

 

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கஸ்பா பகுதியை சேர்ந்த A1 அடமணி (எ) மணிகண்டன், வசந்தபுரத்தை சேர்ந்த A2 கோழி (எ) சக்திவேல் ஆகிய இரண்டு பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உட்பட 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் அபராதமும். இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கியும், குற்றத்தை மறைத்த A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராமும் வித்து வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார்.


  • வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், இவ்வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் புனிதா, அரசு தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ்வரி அமர்நாத் மற்றும் காவலர்களுக்கு பாராட்டை தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 2020ஆம் ஆண்டில் குற்றம் நடைபெற்ற வேலூர் கோட்டை பகுதியில் தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு சிசிடிவி கேமிராக்களை பொறுத்த வேலூர் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம்.  

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

பழைய பாலியல் வழக்குகள் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். 12 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுக்க வைத்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்கை தடுக்க போதிய நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து வருகிறோம். அதன் முக்கிய பகுதியாக பாலியல் வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கோப்புகளை நீதிமன்றத்துக்கு அனுப்பி தண்டனை பெற்று தருவது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. குற்றங்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் காவல்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம். என கூறி உள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget