மேலும் அறிய

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த ஆண் மற்றும் பெண் பணி முடிந்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வேலூர் கோட்டை பகுதிக்கு  சென்றுள்ளனர். அப்போது ஆண் நண்பருடன் சென்ற 26 வயது பெண்ணை அங்கு வந்த 3 பேர்  தாக்கி, 350 ரூபாய் பணம், காதில் அணிந்திருந்த கம்மல், 2 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, ஆண் நண்பரையும் தாக்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை  குற்றச்செயலில் ஈடுபட்ட வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அடமணி (எ) மணிகண்டன் (43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி (எ) சக்திவேல் (21), 17 வயது சிறுவன் ஆகிய 3 நபர்களையும் இவர்களிடம் திருட்டு பொருள் வாங்கி விற்பனை செய்யும் மாரிமுத்து (33) என்பவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையிலும் அடைத்தனர்.

 

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கஸ்பா பகுதியை சேர்ந்த A1 அடமணி (எ) மணிகண்டன், வசந்தபுரத்தை சேர்ந்த A2 கோழி (எ) சக்திவேல் ஆகிய இரண்டு பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உட்பட 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் அபராதமும். இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கியும், குற்றத்தை மறைத்த A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராமும் வித்து வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார்.


  • வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், இவ்வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் புனிதா, அரசு தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ்வரி அமர்நாத் மற்றும் காவலர்களுக்கு பாராட்டை தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 2020ஆம் ஆண்டில் குற்றம் நடைபெற்ற வேலூர் கோட்டை பகுதியில் தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு சிசிடிவி கேமிராக்களை பொறுத்த வேலூர் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம்.  

வேலூர் கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை

பழைய பாலியல் வழக்குகள் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். 12 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுக்க வைத்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்கை தடுக்க போதிய நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து வருகிறோம். அதன் முக்கிய பகுதியாக பாலியல் வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கோப்புகளை நீதிமன்றத்துக்கு அனுப்பி தண்டனை பெற்று தருவது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. குற்றங்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் காவல்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம். என கூறி உள்ளார். 

தலைப்பு செய்திகள்

" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Embed widget