மேலும் அறிய

Crime: பெற்ற மகனை அடியாட்களை வைத்து கொலை செய்த பெற்றோர்: நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் அடியாட்களை ஏற்பாடு செய்து மகனை பெற்றோரே கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் அடியாட்களை ஏர்பாடு செய்து மகனை பெற்றோரே கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம், சூர்யபேட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி சாய் ராம் என்ற 26 மதிக்கத்தக்க இளைஞர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

அரசு பள்ளியில் முதல்வராக இருக்கும் தந்தையும், தாயும் அடியாட்களை ரூ.8 லட்சம் கொடுத்து ஏற்பாடு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகள் 5 பேரில் நால்வரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்துள்ளனர். ஒரு நபர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய சாய் ராம் (26) என்பவரின் உடல் அக்டோபர் 18ஆம் தேதி சூர்யபேட்டையில் வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் அந்தப் பகுதியில் இருந்து கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட  கார் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

மகன் காணாமல் போனதாக புகாரையும் அவரது பெற்றோர் அளிக்கவில்லை. மகனின் உடலை அடையாளம் காண்பதற்காக பிணவறைக்கு வந்தபோது அதே காரில் பெற்றோர் வந்ததும் போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மகன் குடிப்பதற்காக தொடர்ந்து பணம் கேட்டு அடித்ததாகவும், இதையடுத்து மகனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரும் மையத்தில் சேர்த்தகாவும் தெரிவித்தனர்.

ஆனால், மகன் குடிப்பழக்கத்தின் கோரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து பெற்றோரை மகன் அடித்து துன்புறுத்தியிருக்கிறார். இதனால், அதிருப்தி அடைந்த பெற்றோர் ராணி பாய் என்பவரின் சகோதரர் சத்யநாராயணாவின் உதவியை நாடியிருக்கின்றனர்.

சத்யநாராயணா, ஆர்.ரவி, டி.தர்மா, பி.நாகராஜு, டி.சாய், பி.ராம்பாபு ஆகியோர் சாய்ராமை கொலை செய்தனர். மகனை கொல்வதற்கு ரூ.1.5 லட்சம் முன்பணமாகவும், மீதிப்பணம் ரூ.6.5 லட்சத்தை 3 நாட்கள் கழித்து கொடுக்க ஒப்புக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த மாதம் 18ம் தேதி சத்யநாராயணாவும், ரவியும் சாய் ராமை காரில் கல்லேபள்ளி பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அனைவரும் மது அருந்தியிருக்கின்றனர். மது போதையில் இருந்த சாய் ராமின் கழுத்தை கயிற்றால் இறுக்கி அந்த நபர்கள் கொலை செய்தனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் மயிலின் சிகிச்சைக்காக போராடும் பைக் மெக்கானிக் - தீர்வு கிடைக்குமா?

முன்னதாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஆடு விற்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 65 வயதுடைய பெண்ணை கட்டையால் அடித்து கொலை  செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (65). திருமணமாகாதவர். இவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே ஆடு விற்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன் ஆத்திரம் அடைந்த  நிலையில் அங்கிருந்த கட்டையை எடுத்து அழகம்மாளை சரமாரியாக தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Embed widget