மேலும் அறிய

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - திருவண்ணாமலையில் 100 இளைஞர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 150 பேரிடம் ரூ.1.5 கோடி மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தn2nar

திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்குமார் வயது ( 40) என்பவர் மயிலாடுதுறையில் அலுவலகம் வைத்து சிங்கப்பூரில் ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு நபரிடம் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் என வாங்கிக்கொண்டு அவர்களிடம் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு பதில் மஞ்சள் பாண்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு கடந்த ஆறு மாதமாக யாருக்கும் வேலை வாங்கி தராததால் பணம் கட்டி ஏமாற்றமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்  திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள கௌசி கார் அஸசரீஸ் சென்டர் நடத்தி வரும்  பிரேம்குமாரிடமிடம் சென்று பணத்தை பறிகொடுத்த நபர்கள் பணத்தை திரும் கேட்டனர். அப்போது பிரேம் குமார் அவர்களிடம் பணத்தை தரமுடியாது உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென திருவண்ணாமலை வேட்டவலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - திருவண்ணாமலையில் 100 இளைஞர்கள் சாலை மறியல்

அதனைத்தொடர்ந்து இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சாலை மறியலில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையிலேயே அமர்ந்து பணம் கிடைக்கும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம் என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகு சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

 


சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - திருவண்ணாமலையில் 100 இளைஞர்கள் சாலை மறியல்

இதுகுறித்து மயிலாடுதுறை சேர்ந்த முருகன் தெரிவிக்கையில்; 

 அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி வரை பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளோம், பலமுறை தொலைபேசி மூலமும், நேரிலும் பிரேம்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது கொடுக்க மறுத்ததால் இன்று நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கார் அசசரிஸ் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டோம். தங்களிடமிருந்து பெற்ற பணத்தில் தான் அவர் புதிய கார், ராயல் என்பீல்ட் பைக், கார் ஆசஸரீஸ் சென்டர் உள்ளிட்டவற்றை நிறுவி செயல்படுத்தி வருகிறார். எனவே அவரிடம் இருக்கும் பொருட்களை விற்று பணத்தை தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க இளைஞர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.அதேபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பிரேம்குமார் பணம் கைவிட்டு பெற்றுக்கொண்டு வீடியோ ஆதாரத்தை வைத்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget