மேலும் அறிய

பிரதமர் குறித்து அவதூறு கருத்து.. திடீர் திருப்பமாக 10 வயது சிறுமி வழக்கில் சிக்கிய தஞ்சை வாலிபர்! நடந்தது என்ன?

10 வயது சிறுமி ஆபாச வீடியோ வழக்கில் தஞ்சை வாலிபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாக சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், திடீர் திருப்பமாக 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுச்சூழல் குறித்து பி.ஹெச்.டி படித்து வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு பூண்டி தோப்பு கிராமத்துக்கு வந்து  வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி விசாரணை நடத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு, அவரை சிபிஐ அதிகாரிகள் காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தஞ்சாவூரில் உள்ள, மத்திய அரசின் கல்வி நிறுவன விருந்தினர் மாளிகையில் வைத்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதால் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என்ற தகவல் பரவியது. இந்த தகவலை விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோரும் கூறினர். இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். இதனால்தான் சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சாவூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

சிபிஐ அதிகாரிகள் மற்றும் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நாட்கள் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கவும், மார்ச் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை சிறையில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் தரப்பில் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் முதலில் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அவதூறாக தகவல் அனுப்பியதாக கூறி அவரை தனியாக வைத்து விசாரித்தனர். விசாரணை எதற்காக நடைபெறுகிறது என ரகசியமாக வைத்திருந்தனர்.

தற்போது விசாரித்தபோது, விக்டர் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்டர்போல் போலீஸார் மத்திய அரசிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.

இதில் இந்தியாவில் 21 மாநிலங்களில் விக்டர் ஜேம்ஸ் ராஜா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில் விக்டர் ஜேம்ஸ் ராஜா 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து அனுப்பியதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget