மேலும் அறிய
Crime: ஏடிஎம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி - நாகையில் பரபரப்பு
மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறை வைத்து உடைத்ததும், பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்
நாகை வெளிப்பாளையத்தில் கனரா வங்கி ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. வழக்கம்போல இன்று காலை உதவி மேலாளர் மகேஷ் உள்ளிட்ட ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகேஷ் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் DSP.பாலகிருஷ்ணன், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறை வைத்து உடைத்ததும், பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

மேலும் மோப்பநாய் துலிப் சம்பவ இடத்திலிருந்து, தெற்கு நோக்கி சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாததால் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையின் முக்கிய பகுதியில் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement